இந்தியர்கள் 463 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது

லாகூரில் நடைபெற உள்ள மறைந்த மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவு அஞ்சலியில் பங்கேற்பதற்காக 462 இந்திய சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கியுள்ளது.
இந்தியர்கள் 463 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியது
Published on

இஸ்லாமாபாத்:

19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங். பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் உள்ள குருத்வாரா தேரா சாகிப் ஆலயத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடக்க உள்ளது.

இந்த நினைவு அஞ்சலியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் பாகிஸ்தான் செல்கின்றனர். இதையொட்டி, சீக்கிய யாத்ரீகர்கள் 462 பேருக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் விசா வழங்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com