வண்ணாரப்பேட்டை- விமான நிலையத்துக்கு 35 மெட்ரோ ரெயில்கள்

வண்ணாரப்பேட்டை- விமான நிலையத்துக்கு 35 மெட்ரோ ரெயில்கள் 5 நிமிடத்துக்கு ஒரு முறை விரைவில் இயக்கப்பட உள்ளது. #MetroTrain
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ்.வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

பயணிகள் பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையே 10 கிலோ மீட்டர் தூர சுரங்க வழித்தடப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.

இந்த வழித்தடத்தில் எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, அரசினர் தோட்டம், மண்ணடி, ஐகோர்ட்டு, வண்ணாரப்பேட்டை ரெயில் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் குறித்து ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமி‌ஷனர் இறுதி கட்ட ஆய்வு நடத்துகிறார்.

இதை தொடர்ந்து பாதுகாப்பு கமி‌ஷனர் ஒப்புதல் அளித்ததும் வண்ணாரப்பேட்டை- விமான நிலையத்துக்கு நேரடி மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை தொடங்குகிறது.

வண்ணாரப்பேட்டை- விமான நிலையத்துக்கு 35 மெட்ரோ ரெயில்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது. நெருக்கடியான நேரங்களில் 5 நிமிடத்துக்கு ஒரு முறை ரெயில்கள் இயக்கப்படும். இதில் 45 கி.மீட்டர் தூரத்துக் கான வழித்தடப் பாதையில் ரெயில்கள் ஓடும். #MetroTrain

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com