சார்ஜாவில் இருந்து கோவைக்கு 3 கிலோ தங்கம் கடத்தி வந்தவர் கைது

சார்ஜாவில் இருந்து கோவைக்கு 3 கிலோ தங்கம் கடத்தி வந்த நபரை கைது செய்த அதிகாரிகள் அவரிடமிருந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கோவை:

சார்ஜாவில் இருந்து கோவைக்கு நேற்று அதிகாலை வந்த விமானத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த உனைஷ் என்பவர் வந்தார். அவர் கொண்டு வந்த எம்.பி.3 பிளேயர் மற்றும் ஸ்பீக்கர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 2 கிலோ 988 கிராம் எடையுள்ள 52 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.

இதன் மதிப்பு ரூ.96 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். இதனைத்தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த உனைஷ் என்பவரை அதிகாரிகள் கைது செய்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com