சத்துக்கள் நிறைந்த மல்டி கீரை சூப்

கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப் செய்து கொடுக்கலாம். இன்று மல்டி கீரை சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மல்டி கீரை சூப்
மல்டி கீரை சூப்
Published on

பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய சிறுகீரை - 4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பசலைக்கீரை - 4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை - சிறிதளவு
சோள மாவு - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
வெண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை

சோள மாவை 250 மில்லி தண்ணீர் விட்டுக் கரைத்து கொள்ளவும்.

முளைக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரையை நெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.

கீரை நன்கு வதங்கியதும் அதில் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதில் கரைத்து வைத்த சோள மாவை ஊற்றி கொதிக்கவிட்டு, வெண்ணெய் சேர்த்து இறக்கவும்.

சத்தான மல்டி கீரை சூப் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com