சளியை குணமாக்கும் கற்பூரவல்லி டீ

கற்பூரவல்லி டீ செரிமான மண்டலத்தை சீராக்கி, சிறுநீரகப் பாதைத் தொற்றைக் குணப்படுத்தும். சளி, தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த டீயை அருந்தினால் பலன் கிடைக்கும்.
சளியை குணமாக்கும் கற்பூரவல்லி டீ
Published on

தேயிலை - ஒரு டீஸ்பூன்,
கற்பூரவல்லி இலைப்பொடி - கால் டீஸ்பூன்,
தேன் - 1 டீஸ்பூன்.

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

* தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது தேயிலையுடன் கற்பூரவல்லி இலைப்பொடியைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

* பிறகு, அதை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்துப் பருகவும்.

* கற்பூரவல்லி டீ ரெடி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com