search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    இருதய நோய் வராமல் தடுக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ன?
    X

    இருதய நோய் வராமல் தடுக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ன?

    • மாரடைப்பு போன்ற இருதய நோய் உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாகும்.
    • உப்பு நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

    இருதய நோய் வராமல் தடுக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்துகடலூர் கல்யாண் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் கல்யாணராமன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஆரோக்கியமான உணவு முறை

    ஆண்டு தோறும் செப்டம்பர் 29-ந் தேதி உலக இருதய நோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இருதய நோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மாரடைப்பு போன்ற இருதய நோய் உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாகும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைப்பிடித்தல், காற்று மாசு ஆகியவை இருதய நோய் வருவதற்கான காரணங்களாக உள்ளன. சர்க்கரை பானங்கள், பழச்சாறுகளை, தவிர்த்து அதற்கு பதிலாக தண்ணீர் அல்லது இனிப்பு சேர்க்கப்படாத பழச்சாறுகளை தேர்வு செய்து ஒரு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

    உடற்பயிற்சி

    ஒவ்வொரு நாளும் நாம் தேர்வு செய்த சைவ உணவுகள் மொத்த அளவை, 5 பாகங்களாக பிரித்து, அதில் சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை சேர்த்து உண்ண வேண்டும். உப்பு நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் என வாரத்தில் 5 நாட்கள் செய்ய வேண்டும். மேலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் இயங்கும் வகையில், இருத்தல் நல்லது.

    புகைப் பிடிப்பதையும், புகையிலை பயன்படுத்துவதையும், அறவே தவிர்க்க வேண்டும். இதன் மூலம் உங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய ஓர் சிறந்த விஷயமாக விளங்குகிறது. புகைப்பிடிப்பதை கைவிட்ட, 2 ஆண்டுகளுக்குள் இருதய நோய் ஏற்படும் அபாயம் கணிசமாக குறைகிறது. மேலும் 15 ஆண்டுகளுக்குள் புகை பிடிக்காதவர்களின் இருதய நிலைக்கு வந்துவிடுவீர்கள். புகைப்பிடிப்பதை தவிர்ப்பதன் மூலம், உங்கள் இருதய பிரச்சினைகள் குறைவது மட்டும்இன்றி, அருகில் இருக்கும் சகமனிதர்களின் இருதய பிரச்சினைகளும் குறைய வழி வகை செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×