search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அகமதாபாத் டெஸ்ட்டில் அசத்திய சுப்மன் கில், கோலி... மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 289/3

    • சுப்மன் கில் 235 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 128 ரன்கள் குவித்தார்.
    • ஆஸ்திரேலியாவைவிட இந்தியா 191 ரன்கள் பின்தங்கி உள்ளது.

    அகமதாபாத்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா 180 ரன்னும், கேமரூன் கிரீன் 114 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா 2ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்து இருந்தது. ரோகித் சர்மா 17 ரன்னுடனும், சுப்மன்கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3வது நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய ரோகித் சர்மா 35 ரன்னில் அவுட் ஆனார். மறுமுனையில் சுப்மன் கில் அபாரமாக ஆடி சதம் விளாசினார். கிட்டத்தட்ட 6 மணி நேரம் களத்தில் நின்ற அவர் 235 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 128 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். இது டெஸ்ட் போட்டியில் அவருக்கு இரண்டாவது சதம் ஆகும். முன்னதாக புஜாரா 42 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

    இதேபோல் நிதானமாக ஆடிய விராட் கோலி அரை சதம் கடந்தார். இதனால் இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்தது. கோலி 59 ரன்களுடனும், ஜடேஜா 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவைவிட இந்தியா தற்போது 191 ரன்கள் பின்தங்கி உள்ளது. நாளை நான்காம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

    Next Story
    ×