உங்களுடனான தருணங்கள் என்றும் என் நினைவில் நிலைத்திருக்கும்- குஷ்பு உருக்கம்

சுந்தர்-சி- குஷ்பு திருமணத்தில் 80-களின் பல முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.
Kushboo- Bhakyaraj
Published on

பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாக்யராஜ் மறைவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்யராஜ் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,பாக்யராஜின் மறைவு செய்தியை அறிந்த நடிகை குஷ்பூ, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவரது பதிவில், "Rest in peace Sir. உங்களுடன் இருந்த அந்த வேடிக்கையான தருணங்கள் என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். உங்களை நான் மிகவும் மிஸ் செய்வேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இயக்குநர் சுந்தர்.சி - நடிகை குஷ்பு தம்பதியின் மூத்த மகள் அவந்திகாவின் திருமணம் நேற்று கோவாவில் நடைபெற்றது. அந்த திருமணத்தில் 80-களின் பல முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.

இந்த திருமண விவாழவில், பாக்யராஜும் தங்க நிற வேட்டி-சட்டை அணிந்து உற்சாகமாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com