மாநில மொழிப்படங்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சி: டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு

ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மாநில மொழிப்படங்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று டி.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.
மாநில மொழிப்படங்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சி: டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு
Published on

திரைப்படங்களுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தவிர பெரிய நடிகர்கள் ஏன் வாய் திறக்கவில்லை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் தமிழ், மலையாளம் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிப்படங் களை மத்திய அரசு ஒழிக்க முயற்சிக்கிறது. நான் ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவேன்.

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக படம் எடுத்த தயாரிப்பாளர், இயக்குனர் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது. பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை ஆகியவை ஒரே நாளில் வந்துவிட வில்லை. அனைத்து பொருட்களிலும் பல நாட்களாக கலப்படம் நடந்து வருகிறது. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. மக்களை பாதிக்கும் கலப்பட ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அனைவரும் போராட முன்வர வேண்டும்.

சசிகலா முதல்-அமைச்சர் ஆக முடியாது என்று முதலில் சொன்னது நான் தான். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சை நம்ப மக்கள் தயாராக இல்லை. பாரதீய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காலத்துக்கு ஏற்றார் போல் இசை பாடுகிறார். அ.தி.மு.க. வில் பல்வேறு அணிகள் உருவாகிவிட்டன. இதற்கு பிரதமர் மோடியின் வித்தைதான் காரணம். ஓ.பன்னீர்செல்வம் முதல் -அமைச்சராக இருக்கும்வரை வாய் திறக்காமல், இப்போது ஜெயலலிதா மரணம்குறித்து பேசுகிறார்.

கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவுக்கு மு.க.அழகிரி அழைக்கப்பட வில்லை. தி.மு.க.வை வீழ்த்த ஸ்டாலின் ஒருவரே போதும். போயஸ்கார்டனுக்குள் தீபா நுழைந்துள்ளார். இதற்கு பின்னணி உள்ளது. தமிழ்நாட்டை, யாரோ கட்டுப்படுத்த பார்க்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com