ஊரடங்கு உத்தரவு காரணமாக கியா மோட்டார்ஸ் இலவச சர்வீஸ் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், கியா மோட்டார்ஸ் நிறுவனம் இலவச சர்வீஸ் காலக்கெடுவை இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பதாக தெரிவித்துள்ளது.
கியா சொனெட்
கியா சொனெட்
Published on

கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்ட இலவச சர்வீஸ் காலக்கெடுவினை இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் கியா மோட்டார்ஸ் வாகனங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஜூலை மாதம் வரை இலவச சர்வீஸ் சேவையை பயன்படுத்தி கொள்ள முடியும். இலவச சர்வீஸ் சேவை நீட்டிப்பு பற்றிய முழு விவரங்களை கியா மோட்டார்ஸ் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்து இருக்கிறது. 

இந்திய சந்தையில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டு வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. முதல் வாகனமாக கியா செல்டோஸ் கார் ஆகஸ்ட் 2019 இல் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இதை தொடர்ந்து கியா கார்னிவல் எம்.பி.வி. மாடலை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது.

புதிய கியா கார்னிவல் மாடலின் விலையை செல்டோஸ் மாடலை விட அதிகமாக நிர்ணயித்து இருக்கிறது. புதிய கார்னிவல் எம்.பி.வி. மாடல் ஓட்டுனர் இருக்கையை சேர்ந்து மொத்தம் ஒன்பது பேர் பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் இருக்கைகள் நான்கு அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com