சினிமா செய்திப்பிரிவு
மாலை மலர் செய்திகள் அனைத்தும் எங்களின் அனுபவம் வாய்ந்த உதவி ஆசிரியர்களை உள்ளடக்கிய பிரத்யேக செய்திப் பிரிவுகளால் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பக்கச்சார்பின்றி வெளியிடப்படுகின்றன.
குழுவின் பணி: தமிழ் சினிமா குறித்த செய்திகள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட செய்திகள் மற்றும் OTT படைப்புகள் தொடர்பான செய்திகளை வழங்குவது. புதிய திரைப்படங்களின் விமர்சனங்களையும் எழுதுவது.
குழுவின் அனுபவம்: திரைத்துறை செய்திகளில் நீண்ட கால அனுபவம் கொண்ட, கலை நுணுக்கங்களை அறிந்த பிரத்யேக குழுவினரை கொண்டது சினிமா செய்திப்பிரிவு.
செய்தி சேகரிப்பு முறை: சினிமா மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) நேரடியாக சினிமா துறையினரிடம் உரையாடி அதிகாரப்பூர்வத் தகவல்களைத் திரட்டி, அவை செய்தியாக வெளியிடப்படுகின்றன. மேலும், வணிக நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு திரைவிமர்சனங்கள் எழுதப்படுவதோடு, திரைப்படம் பார்த்துவிட்டு திரையரங்குகளில் இருந்து வெளியே வரும் பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அடிப்படையிலும் விமர்சனங்கள் தொகுத்து வழங்கப்படுகின்றன.
விமர்சனக் கொள்கை: வாரந்தோறும் வெளியாகும் புதிய திரைப்படங்களுக்கு எவ்வித வணிகச் சார்புமின்றி, நேர்மையான கோணத்தில் திரை விமர்சனங்களை வழங்குவதே கொள்கை.