ரிஷபம்- 2026 ஆவணி மாத ராசிபலன்

மாதத்தின் முற்பகுதியில் கூடுதல் கவனம் தேவை. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.
Rishabam
Published on

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அதோடு இந்த மாதம் சொந்த வீட்டிற்கு வந்து வலுவடையவும் செய்கிறார். எனவே மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மகத்தான காரியங்கள் பலவும் செய்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். மாதத்தின் முற்பகுதியில் கூடுதல் கவனம் தேவை. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. மனக்குழப்பம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடுகளால் குழப்பத்தில் இருந்து விடுபட இயலும்.

சிம்ம - புதன்

உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். தன ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான புதன் ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். இதன் விளைவாக நல்ல பலன்கள் இல்லம் தேடி வரப்போகிறது. இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 'புத ஆதித்ய யோகம்' ஏற்படுவதால் பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு எதிர்பார்த்த உத்தியோகம் அமையலாம்.

துலாம் - சுக்ரன்

ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன், துலாம் ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் 6-ம் இடத் திற்கே வரும்பொழுது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் சில நல்ல காரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு மட்டுமல்லாமல் வேண்டிய சலுகைகளும் கிடைக்கும். நீண்ட நாளைய பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் பிரச்சினை இல்லாமல் வந்துசேரும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் பாராட்டும், புகழும் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் நட்பு பலப்படும். கலைஞர்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மாணவ - மாணவியருக்கு கல்வி விருத்தி ஏற்படும். பெண்களுக்கு இல்லத்தில் நல்ல சம்பவங்கள் பலவும் நடைபெறும். திருமண முயற்சி கைகூடும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com