

உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டாகும் வாரம். ராசிக்கு சனி மற்றும் செவ்வாயின் பார்வை உள்ளது. திறமைகளை வெளிக்காட்டி சிறப்படைய முடியும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் அதிகரிக்கும். ஐந்து பத்துக்கு அல்லாடிய நிலை மாறும். தான தர்மம் செய்யக்கூடிய வகையில் வருமானம் உயரும். ஏலச்சீட்டு நகை சீட்டு என சேமிப்புகள் அதிகரிக்கும். விட்டு விலகிச் சென்ற சொந்தங்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். சில நேரங்களில் அவை நன்மையாகவும் பல நேரங்களில் தீமையாகவும் முடிந்து விடும். சகோதர சகோதரிகளுக்காக பாடுபட்டு உழைப்பீர்கள். தந்தை வழியிலுள்ள பிரச்சனைகள் அகலும். பூர்வீகச் சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் மத்தியஸ்தர்கள் முன்பேசி சுமூகமாக தீர்க்கப்படும். மாணவர்களுக்கு உயர் கல்விக்கு விரும்பிய கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். பருவப் பெண்களின் மனதிற்கு பிடித்த மணாளனே மாலையிடுவார். கலைத்துறையினர் வளமான எதிர்காலம் அமைத்துக் கொள்ள சாதகமான நேரம். பவுர்ணமி அன்று சித்தர்களை ஜீவசமாதிகள் வழிபடவும்.