search icon
என் மலர்tooltip icon

    மீனம்

    சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2023

    ஏழரைச் சனி ஆரம்பம்

    குருவின் ஆசி பெற்ற மீன ராசி அன்பர்களே இதுவரை உங்கள் ராசிக்கு 11ல் நின்ற சனி பகவான் 12 ம் இடமான அயன, சயன விரய ஸ்தானத்திற்கு சென்று ஆட்சி பலம் பெறப் போகிறார். தன் 3ம் பார்வையால் 2ம் மிடமான தன ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தையும் பார்வை செய்ய இருக்கிறார்.

    விரயச் சனியின் பலன்கள்: தற்போது கும்பத்திற்குச் செல்லும் சனி பகவான் கும்பம், மீனம், மேஷத்தை கடக்கும் வரை உங்களுக்கு ஏழரை சனி உள்ளது. பள்ளிப் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு, மிகுந்த வைத்திய செலவு படிப்பில் ஆர்வமின்மை இருக்கும் . மத்திம வயதினருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம் வீடு வாகன யோகம்போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். வயோதிகராக இருந்தால் தோற்றப் பொழிவு குறைந்து உடல் பலவீனம் , கை, கால் வலி இருக்கும்.சோர்வும், தளர்ச்சியும் மிகுதியாக இருக்கும்.

    12ம்மிடம் என்பது விரயம், பிரிவினை, அயன சயனம், முதலீடு செய்தல் கால்கள் போன்ற காரகத் துவங்களை குறிக்கும். அதிக முதலீட்டில் தொழில் செய்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் முதலீடு, புதிய தொழில் ஒப்பந்தம் செய்பவர்கள் நம்பிக்கையான வாடிக்கையாளர்களை பயன்படுத்தினால் முதலீட்டை காப்பாற்றலாம். இந்த சனிப்பெயர்ச்சியில் மீன ராசியினர் பெரும்பான்மையாக அனுபவிக்கப் போகும் பிரச்சனை விரயம். கடுமையான விரயமாக இருக்கும்.

    வருமானத்திற்கு மீறிய செலவு ஏற்படும். அத்தியாவசிய தேவைக்கு கடன் பெற்றே ஆக வேண்டிய சூழல் உருவாகலாம். நாளைய வருமானத்திற்குரிய செலவு இன்றே முடிவு செய்யப்படும். எனவே விரயத்தை வீடு, வாகனம், நகை போன்ற சொத்தாக ஏற்படுத்திக் கொள்ளலாம். பலர் பிழைப்பிற்காக வெளியூர் , வெளி மாநிலம் அல்லது வெளிநாடு செல்ல நேரும். பலருக்கு இந்த வாய்ப்பு திருப்பு முனையாகவும் இருக்கும். சிலர் மனதில் தேவையற்ற எண்ணங்களை அசை போட்டு தூக்கமே இல்லாமல் இருக்க செய்யும். சிலர் துக்கம் தாளாமல் திருவண்ணாமலைக்கு சென்று முக்திக்கு முயல்வார்கள். சனி நின்ற பார்வை பெற்ற இடங்கள் சுமாரான பலன்களை வழங்கினாலும் சனி பயணிக்கும் நட்சத்திரங்கள் மூலம் சாதகமான பலன்கள் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    3ம் பார்வை பலன்: சனி பகவான் தனது 3 ம் பார்வையில் 2ம்மிடமான தன ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதர வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு மிகுதியாக இருக்கும். வாக்கு ஸ்தானத்திற்கு சனி பார்வை என்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். பேச்சை குறைக்க வேண்டும். வாக்கில் நிதானம் தேவை. நீங்கள் எதார்த்தமாக பேசும் வார்த்தைகள் கூட சொல் அம்பாக மாறும். முன் யோசனை இல்லாத அவசரத்தனமான பேச்சு மற்றவர்களுக்கு மன வருத்தத்தை தரும் விதமாக இருக்கும். பொறுமையாக நிதானமாக இருக்க வேண்டிய காலம் . பங்காளிகளால் ஏற்பட்ட பாகப் பிரிவினை வருத்தங்கள் நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த அளவு பங்கு கிடைக்காவிட்டாலும் சுமூகமாக நல்ல முறையில் சொத்து கிடைக்கும். இதுவரை குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கிய மீன ராசி பெண்களுக்கு ஆண் வாரிசு கிடைக்கும்.

    7ம் பார்வை பலன்: சனியின் 7ம் பார்வை ராசிக்கு 6ம் இடத்திற்கு இருப்பதால் உங்களின் நண்பன் யார்? நண்பராக நடித்து ஏமாற்றுபவர் யார்? என இனம் காணமுடியும். உற்றார் உறவினர்களிடம் இணக்கமற்ற சூழல் ஏற்படும். வயதானவர்கள் உரிய மருத்துவ பரிசோதனை செய்து ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சுகர், பிபி போன்ற நீண்ட நாள் மருத்து சாப்பிடும் நோயின் அறிகுறி தென்படும்.

    பழைய கடனை அடைக்க புதுக்கடன் வாங்க நேரும். அல்லது தொழில் விரிவாக்கம், வீடு கட்டும் பணி, குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற தேவைக்கும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏழரை சனியின் காலம் என்பதால் மீட்டர் வட்டி, கந்து வட்டி வாங்கி வீண் ஆபத்தை வரவழைக்காமல் உண்மையான தேவைக்கு அரசு வங்கிகளின் உதவியை நாட வேண்டும். கடன் வாங்கும் முன் பத்திரத்தில் கையெழுத்திடும் முன் பல முறை வாசித்து,யோசித்து கையெழுத்து போடவும். பண ஏமாற்றம், இழப்பு ஏற்படும் காலம் என்பதால் சாட்சி கையெழுத்து, ஜாமீன் கையெழுத்து, கேரண்டி கையெழுத்து போடுவது போன்ற எதையும் செய்யாமல் இருப்பது நல்லது.

    10ம் பார்வை பலன்: சனியின் 10ம் பார்வை ராசிக்கு 9ம் இடத்திற்கு இருப்பதால் தந்தை வழி முன்னோர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு அதிகரிக்கும். பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் மன வருத்தத்தை தரும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத அலைக்கழித்த சட்டம் தொடர்பான பிரச்சனைகள் தொடர்கதையாக இருக்கும். ஆராய்ச்சி உயர் கல்வி படிப்பவர்கள் மேற்படிப்பை தொடரலாம். சிலருக்கு வெளிநாடு சென்று ஆராய்ச்சி படிப்பை தொடர வாய்ப்பு ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மருத்துவச் செலவில் சீராகும். குல தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். ஒரு சிலருக்கு ஜோதிடம், மாந்தரீகம் கற்க ஆர்வம் மிகும். தியானம் பழகி மனதை கட்டுப்படுத்த முயல்வீர்கள். மூட நம்பிக்கையில் குறி கேட்பது, மந்திர தந்திர தாயத்து வாங்குவது உங்களை வீண் வம்பில் மாட்டிவிடும் என்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    சனியின் அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 17.1.2023 முதல் 14.3.2023 வரை

    மீன ராசிக்கு 2 , 9ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் விரும்பிய கல்லூரியில் உயர் கல்வி வாய்ப்புகள் கிடைக்கும். வங்கிப் பணியாளர்கள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனம் நடத்துபவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.நீங்கள் எந்த துறையில் பணி புரிகிறீர்களோ அந்த துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தந்தை மகன் உறவு சிறக்கும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு குறையும். பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டின் மூலம் காரிய சித்தி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை பிரிப்பதில் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் இப்பொழுது சரியாகிவிடும்.பொதுக் காரியங்களில் ஈடுபட்டு உங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். சிலருக்கு வெளி நாட்டு குடியுரிமை கிடைக்கும்.

    சதயம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 14.3.2023 முதல் 6.4.2024 வரை

    கோட்சாரத்தில் அக்டோபர்30,2023 வரை 2ம் இடத்திலும் அதன் பிறகு ராசியிலும் சஞ்சரிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் மன நிறைவும், நிம்மதியும் உண்டாகும். குடும்ப உறவுகளின் ஆசைகளை, தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிரில் பார்த்தாலும் பார்க்காமல் விலகிச் சென்ற சகோதரர் போனில் நலம் விசாரிப்பார். வருமானம் இல்லாமல் கொடுக்கல் வாங்கல், வரவு செலவில் நாணயத்தை காப்பாற்ற முடியாமல் சங்கடத்தை அனுபவித்தவர்கள் சரளமான பொருள் வரவால்தொழில், வாழ்க்கை இரண்டிலும் திருப்தியான பலனை அடைய முடியும். பொருளாதார நெருக்கடி குறையும். சிலர் தொழில் துறையில் புதிய முதலீடு செய்வீர்கள். நடக்குமா? நடக்காதா என கேள்விக்குறியாக இருந்த அனைத்து நிகழ்வுகளும் மனதிற்கு இனிய முறையில் திருப்பு முனையாக மாறும்.

    17.6.2023 முதல் 4.11.2023 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலங்களில் எதிர்கால திட்டங்களும் கனவுகளும் வெற்றி பெறும். விரயமும், துயரமுமான நிலை மாறும். கொள்கை, கோட்பாடுடன் செயல்படுவீர்கள். தொழிலில் வெற்றியும், முன்னேற்றமும், லாபமும் உண்டாகும். சொத்துக்களை மீட்க தேவையான நிதி உதவி கிடைக்கும். தவறுதலாக வாங்கிய வில்லங்க சொத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். அல்லது தொழில், தொழில் உத்தியோகக்திற்காக பிறந்த ஊரை விட்டு பிரிந்து வெளியூர், வெளிநாடு போகலாம்.

    பூரட்டாதி நட்சத்திர சஞ்சார பலன்கள் 6.4.2024 முதல் 29.3.2025 வரை

    மீன ராசிக்கு ராசி அதிபதி மற்றும் பத்தாம் அதிபதியின் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் எண்ணங்களும் திட்டங்களும் வெற்றியடையும். உங்களை உதாசீனம் செய்தவர்கள் நயந்து பேசுவார்கள். உங்களின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் பற்றி உணருவார்கள். வேலையின்மையால் பிறரின் வெறுப்பிற்கு ஆளாகியவர்களுக்கு கவுரமான வேலை கிடைக்கும். சிலருக்கு மைத்துனருடன் இணைந்து புதிய தொழில் தொடங்கும் ஆர்வம் உண்டாகும். சிலருக்கு புதிய தொழில் ஆரம்பிக்க மனைவி மூலம் பொருள் உதவி கிடைக்கும். சிலர் வயது மூப்பு மற்றும் சோர்வால் வாரிசுகளிடம் தொழில் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுக்க விரும்பலாம்.

    30.6.2024 முதல் 15.11.2024 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலத்தில்வேலை பார்த்த இடத்தில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். உங்களை தவறாக வழி நடத்திய கெட்ட நண்பர்கள் விட்டு விலகுவார்கள். ஆரோக்கிய குறைபாடுகள் சீராகும். உழைக்கும் எண்ணம் அதிகரிக்கும். கோட்ச்சாரம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் எந்த விசயத்திற்கும் கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேசன் செல்லாமல் பேசி சமரசமாக பிரச்சனையை முடிப்பது புத்திசாலித்தனம்.

    திருமணம்: திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடும். இது வரை ஏதாவது காரணம் கூறி திருமணத்தை தள்ளியவர்கள் கூட திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள். மனதிற்கு பிடித்த மண வாழ்க்கை அமையும். அக்டோபர் 30, 2023ல் ராசியல் ராகுவும், 7ல் கேதுவும் சஞ்சரிப்பார்கள் . அதனால் சிலருக்கு விருப்ப விவாகமும் ஏற்படும்.

    பெண்கள்: பெண்களுக்கு இது மகிழ்ச்சியான காலம். உங்களிடம் விரோதமாக இருந்தவர்கள் கூட அன்பாக பேசுவார்கள். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த அனைத்து சிக்கலும் தீரும். விரும்பிய நகை, ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர்.

    பரிகாரம்: முறையான திட்டமிடுதலும் , நேர்மையும் ,இறைநம்பிக்கையும் இருந்தால் எத்தகைய கிரகப் பெயர்ச்சியாலும் உங்களை அசைக்க முடியாது. எனவே நம்பிக்கை மிக முக்கியம். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரவும்.குழந்தைகள் காப்பகம் முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யவும். சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×