

பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெற்று விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே விரயங்கள் அதிகரிக்கும் நேரம் இது. இருப்பினும் குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் அவ்வப்போது வருமானமும் வந்து கொண்டேயிருக்கும். போட்டிக்கடை வைத்தோர் விலகுவர். புதிய திருப்பங்களும் ஏற்படும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள். இழந்த பதவிகளை மீண்டும் பெறுவர்.
உங்கள் ராசிக்கு 9. 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். விரயாதிபதியான புதன் லாப ஸ்தானத்திற்கு வருவதால் விரயத்திற்கேற்ற லாபம் வந்துசேரும். எந்த ஒரு காரியத்தை செய்ய நினைத்தாலும், 'பணம் இல்லையே' என்று கவலைப்படத் தேவையில்லை. காரியத்தை தொடங்கிவிட்டால் அதற்குரிய தொகை எப்படியும் உங்கள் கரங்களுக்கு வந்துவிடும். வீட்டைப் புதுப்பிக்கும் பணியை தொடர்வீர்கள். சொத்து விற்பனையில் கிடைத்த லாபத்தை, புதிய தொழிலுக்கான முதலீடாக பயன்படுத்துவீர்கள். இதுவரை உங்களிடம் பாசம் காட்டாத பெற்றோர். இப்பொழுது பாசம் காட்டுவர். கொடுக்கல் வாங்கல் ஆதாயம் தரும். 'கூட்டு முயற்சிகளில் இருந்து விலகி, தனித்து இயங்கலாமா? என்று சிந்திப்பீர்கள். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகள் ஆச்சரியம் அளிக்கும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு.
ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன். துலாம் ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கும். 8-ம் இடத்திற்கும் அதிபதியான சுக்ரன். உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகமான நேரம்தான். உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். கடன் சுமை பாதிக்கு மேல் குறைந்து கவலைகள் தீரும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். வியாபாரம் மற்றும் தொழிலில் இருந்த நெருக்கடி நிலை மாறும். 'வாங்கியதைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்ததை வாங்க முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, மித மிஞ்சிய பொருளாதாரம் அமைந்து மகிழ்ச்சி அடைவர். திருமணத் தடை அகலும். விட்டுப்போன வரன் மீண்டும் வந்து முடிவாகலாம். சேமிப்பு அதிகரிக்க வழிபிறக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். மாணவ -மாணவியருக்கு படிப்பில் அக்கறை கூடும். குடும்பத்தில் பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு.