வார ராசிபலன் (25.8.2024 முதல் 31.8.2024 வரை)

Published on

25.8.2024 முதல் 31.8.2024 வரை

விபரீத ராஜ யோகம் உண்டாகும் வாரம்.ராசிக்கு குரு பார்வை. அஷ்டமாதிபதி சூரியன் ஆட்சி. எந்த ஒரு கடினமான வேலையையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட பணம், உயில் சொத்து, எதிர்பாராத தன லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. விதவிதமான பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாக வாங்குவீர்கள். செல்வ நிலைகள் உயரும். பிற்கால நலன்கருதி சேமிப்பு க்கள், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வது நல்லது. தடைபட்ட திருமணம் நடக்கும்.

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமையும், உயர்வும் ஏற்படும். சிலருக்கு பணி நிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். கடன் செயல்களில் பொறுமை வேண்டும்.வேலை தேடுபவர்களின் திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்கும். சுய தொழில் புரிபவர்கள் அரசு மற்றும் வங்கி மூலமான உதவிகள் கிடைத்து நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். ஆரோக்கிய குறைபாடு சீராகும். கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும். எள்ளு மிட்டாய் படைத்து கிருஷ்ணரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com