

கடின உழைப்பால் சாதிக்கும் வாரம். ராசிக்கு குரு மற்றும் செவ்வாயின் பார்வை உள்ளது. சொத்துக்களை வாங்குவதில் விற்பதில் நிலவிய தடைகள் தாமதங்கள் அகலும். மனப் போராட்டங்கள் தீரும். தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இறை சக்தியை உணர்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தொழில் உத்தியோகத்தில் சிந்தித்து செயல்படும் போது பெரிய பாதிப்புகள் வராது. நண்பர்களின் உதவி கிடைக்கும். அள்ள அள்ள குறையாத பொருள் சேரும். செய்தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசுத்துறையால் ஆதாயம் உண்டு. அலைச்சலும், அசதியுமான உள்ளுர், வெளியூர், வெளிநாட்டு தொழில் பயணங்கள் உண்டாகும். ஊர் மாற்றம்,வேலை மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது. படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்கும். குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகள் சில பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுவிக்கும். பவுர்ணமி அன்று விரதம் இருந்து காவல் தெய்வங்களை வழிபடவும்.