வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 22 ஜனவரி 2025

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுரை ஸ்ரீசெல்லாத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு தை-9 (புதன்கிழமை)

பிறை: தேய்பிறை.

திதி: அஷ்டமி பிற்பகல் 2.51 மணி வரை. பிறகு நவமி.

நட்சத்திரம்: சுவாதி பின்னிரவு 2.14 மணி வரை. பிறகு விசாகம்.

யோகம்: சித்தயோகம்.

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு. மதுரை ஸ்ரீசெல்லாத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீவிஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமா

னுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீமாணிக்கவாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அபிஷேகம், அலங்காரம். கரூர் ஸ்ரீஅபயபிரதான ரங்கநாதர் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-அனுகூலம்

ரிஷபம்-உண்மை

மிதுனம்-சுகம்

கடகம்-பொறுமை

சிம்மம்-சுபம்

கன்னி-அன்பு

துலாம்- திறமை

விருச்சிகம்-தனம்

தனுசு- நற்செய்தி

மகரம்-பொறுப்பு

கும்பம்-திடம்

மீனம்- தீரம்