வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-12 ஏப்ரல் 2025

இன்று பவுர்ணமி.குச்சனூர் ஸ்ரீசனிபகவான் அலங்காரம்.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு பங்குனி-29 (சனிக்கிழமை)

பிறை: வளர்பிறை.

திதி: பவுர்ணமி மறுநாள் காலை 6.03 மணி வரை. பிறகு பிரதமை.

நட்சத்திரம்: அஸ்தம் இரவு 6.31 மணி வரை. பிறகு சித்திரை.

யோகம்: மரணயோகம்.

ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று பவுர்ணமி. குச்சனூர் ஸ்ரீசனிபகவான் அலங்காரம். பழனி ஸ்ரீ ஆண்டவர் தங்க பல்லக்கு, இரவு தங்க குதிரை வாகனத்தில் பவனி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் தெப்போற்சவம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடல் கழர், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு திருமஞ்சனம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை, உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெரு மாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்ட பதி அலங்கார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜ பெருமாள் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-சிறப்பு

ரிஷபம்-நட்பு

மிதுனம்-விவேகம்

கடகம்-மாற்றம்

சிம்மம்-ஓய்வு

கன்னி-இன்பம்

துலாம்- வெற்றி

விருச்சிகம்-ஆதரவு

தனுசு- மகிழ்ச்சி

மகரம்-உறுதி

கும்பம்-சுபம்

மீனம்-பக்தி