வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 11 மார்ச் 2025

இன்று பிரதோஷம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு மாசி-27 (செவ்வாய்க்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: துவாதசி காலை 10.30 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம்: ஆயில்யம் பின்னிரவு 3.52 மணி வரை பிறகு மகம்.

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று பிரதோஷம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் தங்க கைலாச பர்வதம் அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் பவனி. குடந்தை ஸ்ரீ ஆதிகும்பேசுவரர் ரதோற்சவம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பால் குடக்காட்சி. காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் வள்ளி திருமணக் காட்சி. பெருவயல் ஸ்ரீ சுவாமி புஷ்பக விமானத்தில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் சிறப்பு அபிஷேகம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை கோவில்களில் காலை அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் காலை திருமஞ்சனம். திருவிடை மருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் கோவில்களில் மாலை ரிஷப வாகனத்தில் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆசை

ரிஷபம்-பாசம்

மிதுனம்-உயர்வு

கடகம்-ஆதரவு

சிம்மம்-பெருமை

கன்னி-பொறுப்பு

துலாம்- அமைதி

விருச்சிகம்-விவேகம்

தனுசு- வாழ்வு

மகரம்-பக்தி

கும்பம்-புகழ்

மீனம்-நற்செயல்