இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-14 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : அஷ்டமி பிற்பகல் 2.52 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : பூராடம் மறுநாள் விடியற்காலை 5.44 மணி வரை பிறகு உத்திராடம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்
இன்று துர்காஷ்டமி. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமி திருக்கல்யாணம். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் மகிஷாசுர மர்த்தினி அலங்கார காட்சி. சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் சிம்மவாகினி அலங்காரம். நாட்டரசன் கோட்டை ஸ்ரீ எம்பெருமாள் புறப்பாடு. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்த கோட்டம், வல்லக்கோட்டை, முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.
சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறை யூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுநதருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-ஆைச
மிதுனம்-அமைதி
கடகம்-பரிசு
சிம்மம்-புகழ்
கன்னி-சாதனை
துலாம்- மகிழ்ச்சி
விருச்சிகம்-நலம்
தனுசு- நன்மை
மகரம்-மேன்மை
கும்பம்-களிப்பு
மீனம்-கவனம்