உலகம்

கனடாவில் பயங்கரவாத தாக்குதல்?.. கூட்டத்துக்குள் கார் புகுந்ததில் பலர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த சம்பவம் விபத்தா? அல்லது திட்டமிட்ட தாக்குதலா? என்று ஆராய்ந்து வருகின்றனர்.

மாலை மலர்

கனடாவின் வென்கவுர் நகரில் இன்று பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கனடா வாழ் பிலிப்பைன்ஸ் நாட்டினர், உள்ளூர் மக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சி சாலையோரம்  நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்திற்குள் புகுந்தது. கூட்டத்தில் இருந்த பலர் மீது கார் மோதியது. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

காரை ஓட்டிவந்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். 30 வயதுடைய அந்த அவர் வென்கவுர் பகுதியில் வசித்து வந்தவர் என்று தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் விபத்தா? அல்லது திட்டமிட்ட தாக்குதலா? என்பது குறித்து விசாரணை போலீசார் நடத்தி வருகின்றனர்.