உலகம்

காசா போரை நிறுத்தக்கோரி இஸ்ரேல் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

காசாவில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெல்அவிவ் நகரில் அவர்கள் சாலையின் குறுக்கே டயர்களை குவித்து தீ வைத்து எரித்தனர்.

மாலை மலர்

டெல்அவிவ்:

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடந்து வரும் சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை.

காசாவில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இன்னும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 50 பேர் பிணைக்கைதிகளாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காசா போரை நிறுத்தி ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகளை மீட்டு வர வேண்டும் என கூறி இஸ்ரேல் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் டெல்அவிவ் நகரில் அவர்கள் சாலையின் குறுக்கே டயர்களை குவித்து தீ வைத்து எரித்தனர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இஸ்ரேல் அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.