உலகம்

பிரேசில் பயணத்தை முடித்து கொண்டு நமீபியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது வழங்கி அந்நாட்டு அதிபர் லூலா டி சில்வா கவுரவித்தார் விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

மாலை மலர்

அரசு முறை பயணமாக பிரேசில் சென்றிருந்த பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதான "Grand Collar of the National Order of the Southern Cross விருது வழங்கி அந்நாட்டு அதிபர் லூலா டி சில்வா கவுரவித்தார்

பிரேசில் அளித்த விருது தனக்கு மட்டுமில்லாமல் 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த பெருமை என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நமீபியா சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து தாளம் இசைத்து பிரதமர் மோடி மகிழ்ந்தார்.