உலகம்

700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ஜீப்.. 8 பேர் பலி - நேபாளில் சோகம்

உடனே அங்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.படுகாயம் அடைந்த10 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மாலை மலர்

நேபாளத்தின் கர்னாலி மாகாணம் பாபிகோட்டின் ஜர்மாரே பகுதியில் 18 பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று இரவு, ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த ஜீப் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

உடனே அங்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த10 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. முதற்கட்ட விசாரணையில் அதிக வேகம் காரணமாக விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.