உலகம்

நேபாளத்தில் 4.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.

மாலை மலர்

காத்மாண்டு:

இமயமலையை ஒட்டிய நேபாளத்தில் இன்று அதிகாலை 1.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவானது. கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்தது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.

நேபாளத்தில் சில தினங்களுக்கு முன் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.