சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (09.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அரும்பாக்கம் : 100 அடி ரோடு, வி.என். புரம் 1 முதல் 3-வது தெரு வரை, டிரையம்ப் அபார்ட்மெண்ட்.
பாடி : அன்னை நகர், சுப்புலட்சுமி நகர், ராஜீவ் நகர், பாலாஜி நகர், வைகை நகர்.
திருமங்கலம் : மெட்ரோ மண்டலம், சத்ய சாய் நகர், பாடிகுப்பம் மெயின் ரோடு, TNHB குடியிருப்புகள், பழைய பென், கோல்டன் ஜூபிலி ப்ளாட்ஸ், பாலாஜி நகர், காமராஜ் நகர், பெரியார் நகர், விஜிஎன், அம்பேத்கர் நகர், மேத்தா ராயல் பார்க், ரெயில் நகர், சிவன் கோவில் தெரு, ஸ்ரீனிவாசன் நகர், 100 அடி ரோடு, நியூ காலனி மற்றும் மேட்டுகுளம்.