தமிழக செய்திகள்

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவு மீட்பு குறித்து பிரதமர் பேச வேண்டும் என வலியுறுத்தல்.தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாலை மலர்

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவு மீட்பு குறித்து பிரதமர் பேச வேண்டும் என கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டு பணிக்குழுவை மீண்டும் புதுப்பிப்பது தொடர்பாக இலங்கை பிரதமரிடம் வலியுறுத்துமாறும், கச்சத்தீவை மீட்பது, பாகிஸ்தான் விரிகுடா பகுதியிலுள்ள நம் மீனவர்களின் மீன்பிடி உரிமையை மீட்டெப்பது பற்றி பேச வேண்டும் என்றும் பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.