தமிழக செய்திகள்

அன்புமணி சுற்றுப்பயணத்தை காவல்துறை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்

அரியலூர் சோழகங்கம் ஏரி சீரமைப்பு பணிக்கு ரூ.19.25 கோடி ஒதுக்கிய முதலமைச்சருக்கு வாழ்த்துகள். பனையூரில் பா.ம.க. தலைமையகம் இருப்பதாக கூறுவது சட்டவிரோதம்.

மாலை மலர்

விழுப்புரம்:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி சோழமன்னர்களின் வாரிசுகளை பெருமைப்படுத்த வேண்டும்.

* அரியலூர் சோழகங்கம் ஏரி சீரமைப்பு பணிக்கு ரூ.19.25 கோடி ஒதுக்கிய முதலமைச்சருக்கு வாழ்த்துகள்.

* பனையூரில் பா.ம.க. தலைமையகம் இருப்பதாக கூறுவது சட்டவிரோதம்.

* செயல்தலைவராக இருந்தும் நடைபயணத்திற்காக என்னிடம் அனுமதி வாங்கவில்லை. அதனால்

அன்புமணி சுற்றுப்பயணத்தை காவல்துறை தடை செய்ய வேண்டும்.

* அன்புமணி சுற்றுப்பயணத்தால் வட தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.