சென்னை:
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் 19-ந்தேதி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்களாக இன்பதுரை, தனபால் ஆகியோரை அறிவித்து இருந்தார்.
இந்தநிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால்
சட்டமன்ற பேரவை செயலக கூடுதல் செயலாளரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.