தமிழக செய்திகள்

இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை கொட்டித் தீர்க்கிறது. நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் மிக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

மாலை மலர்

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இந்நிலையில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.