தமிழக செய்திகள்

நாட்டிற்காக அனைவரும் ஒன்றாக செயல்படுவோம் - கனிமொழி

அனைத்துக் கட்சியினரையும் உள்ளடக்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது.ஆபரேஷன் சிந்தூர் குறித்து பல நாடுகளில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன.

மாலை மலர்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதுகுறித்தும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுவது குறித்தும் சர்வதேச நாடுகளுக்கு சென்று விளக்கம் அளிக்க, அனைத்துக் கட்சியினரையும் உள்ளடக்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது.

இதில், தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர், உலக நாடுகளுக்கு சென்று, பாகிஸ்தானில் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட இந்திய பிரதிநிதிகள் ஸ்பெயின் சென்றுள்ளனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறியதாவது:

* ஆளுங்கட்சியுடன் கருத்து மோதல், சூடான விவாதங்கள் இருந்தாலும் நாட்டிற்காக ஒன்றாக நிற்போம்.

* பல்வேறு நாடுகளுக்கு பயணித்து இந்தியாவின் குரலாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து எடுத்துரைத்தோம்.

* ஆபரேஷன் சிந்தூர் குறித்து பல நாடுகளில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன.

* பயங்கரவாத தாக்குதலால் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.