சட்டசபை கூட்டம் இன்று காலையில் நடைபெற்று முடிந்ததும் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் வெளியே வந்தனர்.
அப்போது அமைச்சர் துரைமுருகனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
உடனே எடப்பாடி பழனிசாமி துரைமுருகனிடம் நலம் விசாரித்தார். உடல்நிலை எப்படி இருக்கிறது? பரவாயில்லையா? என்று விசாரித்தார். இருவரும் 2 நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை மற்ற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.