ஆன்லைன் மூலம் பொறியியல் படிப்பிற்கு மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. இதற்கான காலஅவகாசம் இன்னும் 10 நாட்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது 2.55 லட்சம் பேர் விண்ணப்பத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு மொத்தமாக 2.53 லட்சம் மாணவ-மாணவிகள்தான் விண்ணப்பித்திருந்தனர். தற்போது 10 நாட்களுக்கு முன்னதாகவே கடந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களை விட எண்ணிக்கை தாண்டியுள்ளது.