சென்னை:
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி முதல் கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து அவர் கூறுகையில், நிர்வாக திறமை இருந்தால் அனைத்தையும் சமாளிக்க முடியும். கடன் சுமையை கையாள தி.மு.க. அரசுக்கு திறமை இல்லை என்றார்.