தமிழக செய்திகள்

234 தொகுதிகளிலும் விருப்பமனு பெறும் தே.மு.தி.க.

சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.விருப்ப மனுக்களை வரும் 12-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

மாலை மலர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

* சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.

* நாளை முதல் பிப்ரவரி 12-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு வழங்கலாம்.

* விருப்ப மனுக்களை வரும் 12-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

* பொது தொகுதிக்கு விருப்ப மனு கட்டணம் ரூ.15 ஆயிரமாகவும், தனித்தொகுதிக்கு ரூ.10 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.