பாராளுமன்றத்தின் மக்களவை இன்று காலை கூடியது. சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை தொடங்கி வைத்தார். அவை தொடங்கிய சிறிது நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என கோரினர். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
அப்போது, பா.ஜ.க. உறுப்பினர் மீனாட்சி லேகி எழுந்து நின்று, போபர்ஸ் விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என கோரினார்.
அவரது கோரிக்கைக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். போபர்ஸ் விவகாரம் குறித்து பேச சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீது பேப்பர்களை கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார்.