திருவான்மியூர்:
மந்தைவெளி தென்கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் விஜயகுமார், திருவான்மியூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் யுவராஜ் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பள்ளி வாகனங்களை ஆய்வு நடத்தினர். மந்தைவெளி ஆரியபுரம் செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியில் வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் திருவான்மியூர், மந்தைவெளி பகுதியை சேரந்த 40 பள்ளிகளை சேர்ந்த 129 வாகனங்கள் பங்கேற்றன அவற்றில் 15 வாகனங்கள் தகுதியற்றவைகளாக அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள 114 வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்கப்பட்டது.