இந்தியா

கர்நாடகாவில் 2வது திருமணம் செய்ய முயன்ற கணவனை செருப்பால் அடித்த மனைவி

மனைவி தனுஜாவிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கார்த்திக் துன்புறுத்தியுள்ளார். கார்த்திக் நாயக், மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்ய முயன்றுள்ளார்.

மாலை மலர்

கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் நாயக் என்பவர் 4 ஆண்டுகளுக்கு மும்பு தனுஜா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

மனைவி தனுஜாவிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கார்த்திக் நாயக், மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்ய முயன்றுள்ளார்.

இந்த தகவலறிந்து மண்டபத்துக்கு வந்த மனைவி, அனைவர் முன்பும் கணவனை செருப்பால் அடித்து திருமணத்தை நிறுத்தினார்.