இந்தியா

ஜம்மு காஷ்மீரில் துணிகரம்: சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்தனர்.அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இன்று சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் பலர் காயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.