இந்தியா

பிரதமர் மோடி நாளை வாரணாசி பயணம்

விவசாயிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு தடவை வழங்கும் நிதி உதவியின் 20-வது தவணையை தொடங்கி வைக்கிறார்.வாரணாசி தொகுதிக்கு ரூ.2,248 கோடி செலவில் 53 புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

பிரதமர் மோடி தனது எம்.பி. தொகுதியான வாரணாசி பகுதிக்கு நாளை செல்கிறார். அங்கு அவர் நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு தடவை வழங்கும் நிதி உதவியின் 20-வது தவணையை தொடங்கி வைக்கிறார். பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

வாரணாசி தொகுதிக்கு ரூ.2,248 கோடி செலவில் 53 புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 53 புதிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.