இந்தியா

Operation Akhal: ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை - ராணுவ வீரர் காயம்

'ஆபரேஷன் அகால்' மூன்றாவது நாளாக தொடர்கிறது.இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

மாலை மலர்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக பாதுகாப்புப் படையினரால் தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் அகால்' மூன்றாவது நாளாக தொடர்கிறது.

தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் அகால் வனப்பகுதியில் இன்று நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் மேலும் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதன் மூலம், இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஒரு ராணுவ வீரரும் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.