இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ந் தேதி மோதல் ஏற்பட்டது. சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் தடுத்த போது இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தனது தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். 2இதனையடுத்து நாடுகளின் எல்லைகளிலும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு முதல்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்-உடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி சார்பாக நலம் விசாரித்து, இரு நாட்டு உறவை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Called on President Xi Jinping this morning in Beijing along with my fellow SCO Foreign Ministers. Conveyed the greetings of President Droupadi Murmu & Prime Minister @narendramodi. Apprised President Xi of the recent development of our bilateral ties. Value the guidance of… pic.twitter.com/tNfmEzpJGl