பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இதற்கான காரணங்கள் வாக்காளர்களின் இறப்பு மற்றும் இடம்பெயர்வு ஆகும். வரைவு வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி பட்டியல் வெளியிடப்படும் என்று ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், இதுவரை நடத்தப்பட்ட பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் 18 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டதாகவும், 26 லட்சம் பேர் வெவ்வேறு தொகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும், 7 லட்சம் பேர் இரண்டு இடங்களில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளும் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கைக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
#WATCH | Delhi: INDIA bloc MPs stage a protest outside the Parliament, against the Special Intensive Revision (SIR) exercise being carried out by the Election Commission of India ahead of the Bihar Assembly elections pic.twitter.com/0Qhe7EqfQW