குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் இருந்துள்ளனர். இரண்டு விமானிகள் உள்பட 12 விமான ஊழியர்கள் இதில் அடங்குவர்.
பயணம் செய்தவர்களில் இந்தியவர்கள் 181 பேர் எனத் தெரியவந்துள்ளது. இதில் 100 பேர் பெண்கள் ஆவார்கள். 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 14 பேர் அடங்குவார்கள். இதுவரை உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.