தங்கமணி 
உள்ளூர் செய்திகள்

முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

முறைகேடாக சேர்த்த சொத்துகளை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ததாக முதல் கட்ட தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

போலீசார் தங்கமணி, அவரது மனைவி, மகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2016-2020 அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 4.85 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முறைகேடாக சேர்த்த சொத்துகளை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ததாக, முதல்கட்ட தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.