search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்ச்சி"

    • கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் 96.38 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
    • 5001 மாணவர்களும், 6426 மாணவிகளும் என மொத்தம் 11,427 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை ஆண்கள் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 1,952 பேரும், பெண்கள் பள்ளியை சேர்ந்த 4,431 மாணவிகளும், இருபாலர் பள்ளிகளை சேர்ந்த 19, 781 பேரும் என மொத்தம் 26,164 பேர் எழுதினர்.

    இந்தநிலையில் இன்று வெளியாக பிளஸ்-1 தேர்வு முடிவில் 24,917 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 1702 பேரும், மாணவிகள் 4237 பேரும், இருபாலர் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 18,978 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் திருப்பூர் மாவட்டம் 95.23 சதவீதம் பெற்று மாநில அளவில் 3-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் 96.38 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    அரசு பள்ளிகள் அளவில் 92.06 சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. 78 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 5 ஆயிரத்து 666 பேரும், மாணவிகள் 6746 பேரும் என மொத்தம் 12,412 பேர் தேர்வு எழுதினர். இதில் 5001 மாணவர்களும், 6426 மாணவிகளும் என மொத்தம் 11,427 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    கொரோனாவுக்கு முன் 2018, 2019 ஆகிய 2 ஆண்டுகளும் மாநிலத்தில் திருப்பூர் இரண்டாம் இடம் பெற்றது. கடந்த 2020ம் ஆண்டு 3 இடங்கள் பின்தங்கி, 5-ம் இடத்தை எட்டியது. 2021-ம் ஆண்டு அனைவரும் தேர்ச்சி பெற்றனர். கடந்த 2022ம் ஆண்டு பிளஸ் 1 தேர்வில் மாநிலத்தில் 11வது இடம் பெற்ற திருப்பூர் கடந்த 2023ம் ஆண்டு 96.83 சதவீத தேர்ச்சியுடன், 10 இடங்கள் முன்னேறி மாநிலத்தில் முதலிடம் பெற்று பாராட்டு பெற்றது. நடப்பாண்டு(2024) பிளஸ்- 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதித்த திருப்பூர், பிளஸ் 1 தேர்வில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    • கடந்த ஆண்டு 85.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
    • கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    கிருஷ்ணகிரி:

    தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி தொடங்கி கடந்த மாதம் 8-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 12,716 மாணவர்கள் 12,425 மாணவிகள் என மொத்தம் 25,141 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    இதில் தேர்வு எழுதிய 12716 மாணவர்களில் 11345 பேரும், 12425 மாணவிகளில் 11642 பேரும் என மொத்தம் மாவட்டத்தில் 22987 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 91.43 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 85.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு கூடுதலாக 6.07 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பின்வரும் நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பின்பற்ற வேண்டும்.
    • 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்வதுடன், பள்ளிக்குழு தேர்ச்சி விதிகளை பின்பற்றி தேர்ச்சி அளிக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ், அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடப்பு (2023-24) கல்வி ஆண் டில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் சுயநிதி பள்ளி, ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளி மற்றும் சிறப்பு பள்ளிகளில் 6, 7, 8, 9-ம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பின்வரும் நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பின்பற்ற வேண்டும்.

    அதன்படி, 6, 7-ம் வகுப்பு களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையின்படி ஒருங்கிணைந்த பதிவேட்டில் 3-ம் பருவ தேர்வுக்குரிய மதிப் பெண்கள், கிரேடுகளை பதிவு செய்ய வேண்டும். 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்வதுடன், பள்ளிக்குழு தேர்ச்சி விதிகளை பின்பற்றி தேர்ச்சி அளிக்க வேண்டும்.

    மாணவர்களின் இடை நிற்றலை தவிர்க்கவும், கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்துக்கு குறையாமலும் ஆசிரியர் குழுவின் ஒப்புதலுடன் 9-ம் வகுப்புக்கான தேர்ச்சி விதிகள் முடிவு செய்யப்பட்டு, தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும்.

    அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 3 சதவிகித பின்முனை வட்டி மானியம் கடன் திரும்ப செலுத்தும் காலம் வரையிலும் வழங்கப்படுகிறது.
    • மாவட்ட தொழில் மையம், கள்ளக்குறிச்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2023-2024 ஆம் நிதியாண்டில் சுய தொழில் தொடங்க கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நீட்ஸ் திட்டத்தின் கீழ் 36 தொழில் திட்டங்களுக்கு மானியமாக ரூ.3 கோடியே 55 லட்சம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பீட்டில்தொழில் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழக அரசு சார்பில் நிலம், கட்டிடம் மற்றும் எந்திரம் உள்ளடக்கிய திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு மானியம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 3 சதவிகித பின்முனை வட்டி மானியம் கடன் திரும்ப செலுத்தும் காலம் வரையிலும் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ,அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தொழில்சார் பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் மற்றும் கூடுதல் வழிகாட்டுதலுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கள்ளக்குறிச்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்தி க்குறிப்பில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • தேர்ச்சி குறைவாக உள்ள 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொடர்ந்து தேர்வுகள் நடத்த வேண்டும்.
    • வாட்ஸ்ஆப் குழு உருவாக்கி மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் குறித்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    கிருஷ்ணகிரி 

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக, அரசு மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மார்ச் 2023 தேர்ச்சி குறித்த பகுப்பாய்வு கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சரயு பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட் டத்தில் உள்ள 107 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளிகளை சிறப்பு கவனம் செலுத்தி, வரும் கல்வி ஆண்டில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள 25 பள்ளி தலைமை ஆசிரியர் வாட்ஸ்ஆப் குழு உருவாக்கி தினந்தோறும் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் குறித்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    மெதுவாக கற்கும் மாணவர்களை கண்டறிந்து சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று தேர்ச்சி குறைவாக உள்ள 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொடர்ந்து தேர்வுகள் நடத்த வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில் பாட வாரியாக சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் மேம் பாட்டிற்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்பு களைப் பெற நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி என்ற திட்டம் அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும்.

    இதன் வாயிலாக சேகரிக் கப்படும் நிதி தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவ லர்கள் மணிமேகலை (கிருஷ்ணகிரி), கோவிந்தன் (ஓசூர்), மாவட்டத் திட்ட அலுவலர் வடிவேலு, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் மற்றும் பள்ளி தலைமையா சிரியர்கள், உதவி தலை மையாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மாணவ, மாணவிகளில் இவ்வாண்டு நீட் தேர்வினை 481 பேர் எழுதினர்.
    • தகுதி பெற்ற மாணவ, மாணவிகளை அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 235 பேர் இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற

    மாணவ, மாணவிகளில் இவ்வாண்டு நீட் தேர்வினை 481 பேர் எழுதினர். அதில் 235 மாணவர்கள் இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்றுள்ளனர். அதன்படி, அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவர் மாதவன் 720 மதிப்பெண்களுக்கு 536 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், காளிங்காவரம் மாணவி கல்பனா 462 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், யு.மிட்டப்பள்ளி மாணவர் விழிவர்மா 442 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும், நெடுங்கல் மாணவர் சபரி 425 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி இந்துமதி 376 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    இதே போல் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராயக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசம்பட்டி, காவேரிப்பட்டணம், மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குன்னத்தூர், ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

    அதன்படி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவச் சேர்க்கைக்கான உள் ஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் அதிக அளவிலான மாணவர்கள் இளநிலை மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றவராகின்றனர். தகுதி பெற்ற மாணவ, மாணவிகளை அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்.

    • 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்காக முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் உமாதேவி வரவேற்றார். பள்ளியின் முன்னாள் மாணவரும், காவல் ஆணைய உறுப்பினருமான முன்னாள் டி.ஜி.பி ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

    அப்போது அவர் பேசுகையில், 'பள்ளிக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அனைத்து படிப்புகளுக்குமான கல்வி நிறுவனங்களும் உள்ளன. வாய்ப்பை பயன்படுத்தி கொண்டவர்கள் அடுத்த கட்டத்திற்கு உயருகின்றனர். வாய்ப்பை தவறவிட்டவர்கள் அதே இடத்திலேயே நின்று விடுகின்றனர். மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும், என்றார்.விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி சபரிநாதன், சார்பு ஆய்வாளர் சங்கர நாராயணன், நத்தம்பட்டி சார்பு ஆய்வாளர் பண்டிலட்சுமி, ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 63 பேர் தேர்ச்சி பெற்றனர்
    • பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் முதல் மதிப்பெண் 531 ஆகும்

    பெரம்பலூர்,

    நடப்பு ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 7-ந் தேதி நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்தவர்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 122 பேர் 'நீட்' தேர்வினை எழுதினர். அவர்களுக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் கற்பகத்தின் நேரிடையான மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதேபோல் பெரம்பலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-2 முடித்த 95 பேர் நீட் தேர்வு எழுதினர்.

    இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் அரசு பள்ளிகளை சேர்ந்த 5 மாணவர்களும், 18 மாணவிகளும் என மொத்தம் 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மேலும் அதில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு 3 மாணவர்களுக்கும், 4 மாணவிகளுக்கும் என மொத்தம் 7 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

    இதேபோல் பெரம்பலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-2 முடித்து நீட் தேர்வு எழுதிய 95 பேரில், 40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு 8 மாணவர்களுக்கும், 9 மாணவிகளுக்கும் என மொத்தம் 17 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் முதல் மதிப்பெண் 531 ஆகும். அந்த மதிப்பெண்ணை புகழேந்தி என்ற மாணவர் பெற்றார். பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளையும், அதில் அரசு இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளவர்களையும் கலெக்டர் கற்பகம், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதியதில், 50 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 5 பேர் அரசு இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் கிடைத்து டாக்டருக்கு படித்து வருகின்றனர். இந்த ஆண்டு 13 பேர் கூடுதலாக மொத்தம் 63 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவா்களில் 24 பேருக்கு அரசு இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கடந்த 2020-ம் கல்வியாண்டில் 6 பேரும், கடந்த 2021-ம் ஆண்டில் 5 பேரும் அரசு இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் கிடைத்து டாக்டருக்கு படித்து வருகின்றனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வை மொத்தம் 7090 பேர் எழுதினர்.
    • தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் 32-வது இடம் பெற்றது.

    ஊட்டி,

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது.

    நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வை 3502 மாணவர்கள், 3588 மாணவிகள் என மொத்தம் 7090 பேர் எழுதினர்.

    இந்த நிலையில், நேற்று எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவு இணையத ளத்தில் வெளியிடப்பட்டது.

    மாணவர்கள் பாட வாரியாக எடுத்த மதிப்பெண் விவரம் மாணவர்கள் பள்ளிகளில் கொடுத்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது.

    மேலும் பள்ளிகளில் உள்ள தகவல் பலகைகளில் மாணவர்கள் தேர்ச்சி விவரம் ஒட்டப்பட்டது.

    எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவில் நீலகிரி மாவட்டத்தில் 2,916 மாணவர்கள், 3,336 மாணவிகள் என மொத்தம் 6,297 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் 88.82 சதவீதம் ஆகும்.

    இதில் 84.55 சதவீதம் மாணவர்களும், 92.98 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றனர்.

    தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் 32-வது இடம் பெற்றது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 89.5 ஆக இருந்த நிலையில், மாநிலத்தில் 19-வது இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவு வெளியான நிலையில், வருகிற 26-ந் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது. இருப்பினும், சில பள்ளி களில் பிளஸ்-1 சேர்க்கை நடந்து வருவதால், மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் தாங்கள் எடுத்த மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இதன் மூலம் பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    • எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் கரூரில் 91.49 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்
    • 59 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது

    கரூர்

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கி 20-ந்தேதியுடன் முடிவடைந்தது. தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடந்து முடிந்தது. இதனையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன. மேலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அரசு அறிவித்த இணையதளங்கள் மூலமாகவும் தெரிந்து கொண்டனர். மேலும் சில மாணவ, மாணவிகள் தங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் வந்து நண்பர்களுடன் சேர்ந்து தேர்வு முடிவுகளை செல்போன் மூலம் தெரிந்து கொண்டனர். அப்போது மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை 188 பள்ளிகளை சேர்ந்த 5,891 மாணவர்கள், 5,890 மாணவிகள் என மொத்தம் 11,781 பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.இதில் 5,200 மாணவர்கள், 5,579 மாணவிகள் என மொத்தம் 10,779 பேர் தேர்ச்சி பெற்று 91.49 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாண்டு மாணவர்கள் 88.27 சதவீத தேர்ச்சியும், மாணவிகள் 94.72 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

    அரசுப்பள்ளிகளில் 87.45 சதவீத தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 97.39 சதவீத தேர்ச்சியும், தனியார் பள்ளிகளில் 99.1 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் கரூர் மாவட்டம் 20-வது இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 83 சதவீதமாக இருந்தது. இந்தாண்டு 91.49 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.கரூர் மாவட்டத்தில் 188 பள்ளிகளில் 59 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 16 அரசு பள்ளிகளும், 2 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 41 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 59 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது.

    • 10-ம் வகுப்பு தேர்வில் 30 ஆயிரத்து 152 பேர் எழுதினர்.
    • 10-ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 28 ஆயிரத்து 323 பேர் தேர்ச்சிப் பெற்றனர்.

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20ந் தேதி வரை நடந்தது. இத்தேர்வை திருப்பூர் மாவட்டத்தில் 312 பள்ளிகளைச் சேர்ந்த 15 ஆயிரத்து 67 மாணவர்கள், 15 ஆயிரத்து 85 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 152 பேர் எழுதினர். இதன் முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 30 ஆயிரத்து 152 மாணவ, மாணவிகளில் 13 ஆயிரத்து 785 மாணவர்கள், 14 ஆயிரத்து 538 மாணவிகள் என மொத்தம் 28 ஆயிரத்து 323 பேர் தேர்ச்சிப் பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.93 ஆகும். இது கடந்த ஆண்டை விட 5.47 சதவீதம் அதிகம். தேர்வு எழுதிய மாணவர்களில் 91.49 சதவீதம் பேரும், மாணவிகளில் 96.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் கடந்த ஆண்டு 29வது இடம் பிடித்திருந்த நிலையில் தற்போது 18 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை திருப்பூர் மாவட்டம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் திருப்பூர் மாவட்டத்தில் 47 அரசு பள்ளிகள்,1 அரசு உதவி பெறும் பள்ளி, 104 தனியார் பள்ளிகள்,10 சுயநிதி பள்ளி என மொத்தம் 162 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    • இந்த ஆண்டு 4 இடங்கள் குறைந்து 13-வது இடத்தை பிடித்துள்ளது.
    • தேர்வு எழுதிய கைதிகளில் ஒருவர்அதிகபட்சமாக 327 மதிப்பெண்கள் பெற்று உள்ளார்

    கோவை,

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடந்தது.

    கோவை மாவட்டத்தில் 526 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 81 மாணவர்கள், 20 ஆயிரத்து 175 மாணவிகள் என மொத்தம் 40 ஆயிரத்து 256 பேர் இந்த தேர்வை எழுதினர்.

    இதன் முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இதில் கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 40 ஆயிரத்து 256 மாணவ, மாணவிகளில் 18 ஆயிரத்து 221 மாணவர்கள், 19 ஆயிரத்து 416 மாணவியர் என மொத்தம் 37 ஆயிரத்து 637 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.49 ஆகும். இது கடந்த ஆண்டை விட 1.11 சதவீதம் அதிகம்.

    13-வது இடம்

    தேர்வு எழுதிய மாண வர்களில் 90.74 சதவீதம் பேரும், மாணவிகளில் 96.24 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் கடந்த ஆண்டு 9-வது இடம் பிடித்திருந்த நிலையில் இந்த ஆண்டு 4 இடங்கள் குறைந்து 13-வது இடத்தை பிடித்துள்ளது.

    தமிழகத்தில் மொத்தம் 12,638 பள்ளிகளை சேர்ந்தவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.45 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24 சதவீதமும், தனியார் பள்ளிகள் 97.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. இதைத்தவிர்த்து இரு பாலர் பயின்ற பள்ளிகள் 91.58 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 83.25 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 94.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 3,718 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,026 ஆகும்.

    கோவை மத்திய சிறையில் 45 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 47 பேர் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வை எழுதினார்கள். இதில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும். தேர்வு எழுதிய கைதிகளில் ஒருவர்அதிகபட்சமாக 327 மதிப்பெண்கள் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×