search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிஎஸ்கே"

    • சென்னை சூப்பர் கிங்ஸ் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
    • சென்னை அணியின் பந்து வீச்சு முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.

    பெங்களூரு:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த மார்ச் 22-ந்தேதி சென்னையில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதுவரை 66 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சி உள்ள உள்ளன.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முன்னேறியது.

    நேற்று ஐதராபாத்-குஜராத் அணிகள் மோத இருந்த ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஐதராபாத் 3-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    பிளே-ஆப் சுற்றுக்கு 4-வது அணியாக தகுதி பெறப் போவது யார்? என்பது நாளை தெரியும். பெங்களூருவில் நாளை நடக்கும் 68-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    14 புள்ளிகளுடன் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும் சென்னை அணி தகுதி பெற்று விடும்.

    ஒருவேளை தோற்கும்பட்சத்தில் அது மோசமான தோல்வியாக இருக்கக் கூடாது. இது போன்ற சூழ்நிலையை தவிர்க்க வெற்றி பெற வேண்டியது சென்னை அணிக்கு கட்டாயம்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பலமாக இருக்கிறது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல், ஷிவம் துபே ஆகியோர் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஜடேஜா நல்ல நிலையில் உள்ளார். கடைசி கட்டத்தில் டோனி அதிரடியாக விளையாடுகிறார்.

    சென்னை அணியின் பந்து வீச்சு முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். பதிரனா, முஸ்தாபிசுர் ரகுமான் ஆகியோர் இல்லாதது பாதிப்பை காட்டுகிறது. எனவே பந்து வீச்சில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது முக்கியம்.

    பெங்களூரு அணி 12 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு நாளைய போட்டியில் கண்டிப்பாக தகுதி பெற முடியும். தோற்றாலும் அல்லது மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும் பெங்களூரு அணி வெளியேறி விடும்.

    மேலும் பெங்களூரு அணி வெற்றி பெற்றாலும் சென்னை அணியின் ரன்-ரேட்டை முந்த வேண்டும். பெங்களூரு முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால், 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அல்லது 2-வது பேட்டிங் செய்தால் 11 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெல்ல வேண்டும். ஒருவேளை மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டால் பெங்களூரு அணிக்கு கடினமாக அமையும்.

    அந்த அணி தொடர்ந்து 5 வெற்றி பெற்றுள்ளதால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

    பெங்களூரு அணி பேட்டிங்கில் விராட்கோலி நல்ல நிலையில் உள்ளார். அவர் இதுவரை 661 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். மேலும் டுபிளிசிஸ், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் ஆகிய பேட்ஸ் மேன்களும் உள்ளனர்.

    பந்து வீச்சில் முகமது சிராஜ், யஷ் தயாள், பெர்குசன், கரண் சர்மா ஆகியோர் உள்ளனர். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் சிறிது என்பதால் இரு அணிகளும் ரன்களை குவிக்க முயற்சிக்கும்.

    மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக இழந்து விட்டன. டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளின் வாய்ப்புகள் ஏறக்குறைய முடிந்து விட்டது.

    இன்று மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வெற்றி பெற்றாலும் அந்த அணியின் ரன்ரேட் (-0.787) மிகவும் மோசமாக இருப்பதால் அந்த வெற்றி பலன் அளிக்காது.

    • பெங்களூரு அணி தங்களுடைய கடைசி போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது.
    • அதில் பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளது.

    விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வருகிறது. முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்ட அந்த அணி அடுத்த 5 போட்டிகளில் வரிசையாக வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது.

    இந்த சூழ்நிலையில் பெங்களூரு அணி தங்களுடைய கடைசி போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது. அதில் பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளது.

    இந்நிலையில் ஆர்சிபி அணி வீரர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அனுஜ் ராவத், கரண் ஷர்மா, ஸ்வப்னில் சிங் மற்றும் ஆர்சிபி உதவி ஊழியர்கள் சாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சிஎஸ்கே அணி 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
    • பெங்களூரு அணி 12 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்து முடிந்த ஆட்டங்கள் முடிவில் கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மும்பை, பஞ்சாப், குஜராத் ஆகிய 3 அணிகள் வெளியேறி விட்டன. மீதமுள்ள 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி போட்டு வருகின்றனர்.

    தற்போது உள்ள சூழ்நிலையில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4-வது இடத்திற்கு சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறும் என கருத்துக்கள் வெளியாகி வருகிறது. டெல்லி, லக்னோ ஆகிய அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருந்தாலும், அந்த அணிகளின் நெட் ரன் ரேட் மோசமாக இருப்பதால் அதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் ஆடிய முதல் எட்டு போட்டிகளில் ஏழு தோல்விகளை சந்தித்து இருந்தது. எனினும் அடுத்த ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று, தற்போது 13 போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில் மே 18-ந் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றால் சிஎஸ்கே-வை முந்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறும்.

    மே 18-ந் தேதி நடைபெறும் இந்த போட்டியில் ஆர்சிபி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது சிஎஸ்கே இலக்கை 18 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும். இப்படி எல்லாமே 18 என்கிற வகையில் இருக்க, விராட் கோலியின் ஜெர்சி நம்பரும் 18 ஆகும். இதனால் ஆர்சிபி தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என நேற்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் 4 ஆண்டுகளாக மே 18-ந் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றுள்ளதாக ரெக்கார்ட் சொல்கிறது. 2013 மற்றும் 2014-ம் ஆண்டில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் விராட் கோலி 56, 27 ரன்கள் எடுத்துள்ளார்.

    மேலும் 2016-ம் ஆண்டில் பஞ்சாப் அணிக்கு எதிராக விராட் சதம் அடித்தார். அந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது. இதேபோல 2023-ம் ஆண்டில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் கோலி சதம் அடித்தார். அதிலும் ஆர்சிபி அணியே வெற்றி பெற்றுள்ளது.

    இதனால் மே 18 ஆர்சிபி அணிக்கு சாதகமாக உள்ளதாகவும் இதன் மூலம் முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

    • சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால் பெங்களூரு அணி 18.1 ஓவரில் அந்த இலக்கை எட்ட வேண்டும்
    • சிஎஸ்கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வீழ்த்த வேண்டும்.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் ஆடிய முதல் எட்டு போட்டிகளில் ஏழு தோல்விகளை சந்தித்து இருந்தது. எனினும் அடுத்த ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று, தற்போது 13 போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. இந்த இரண்டு அணிகளும் மோத உள்ள லீக் போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றால் சிஎஸ்கே-வை முந்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என கூறப்படுகிறது.

    தற்போது உள்ள சூழ்நிலையில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மீதமுள்ள நான்காவது இடத்தை பிடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி எழுந்துள்ளது. டெல்லி, லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருந்தாலும், அந்த அணிகளின் நெட் ரன் ரேட் மோசமாக இருப்பதால் அதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

    அதன் அடிப்படையில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூரு அணி பெரிய வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மே 18 அன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன.

    இந்த போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால் பெங்களூரு அணி 18.1 ஓவரில் அந்த இலக்கை எட்ட வேண்டும். அதேபோல பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுப்பதாக வைத்துக் கொண்டால், சிஎஸ்கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அப்படி செய்தால் சிஎஸ்கே அணியின் நெட் ரன் ரேட்டை பெங்களூரு அணியால் முந்த முடியும். மேலும், போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் 14 புள்ளிகளை பெற்று, நெட் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணியை முந்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

    மே 18-ந் தேதி நடைபெறும் இந்த போட்டியில் ஆர்சிபி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது சிஎஸ்கே இலக்கை 18 ஓவரில் சேஸ் செய்ய வேண்டும். இப்படி எல்லாமே 18 என்கிற வகையில் இருக்க, விராட் கோலியின் ஜெர்சி நம்பரும் 18 ஆகும். இதனால் ஆர்சிபி தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 18 என்ற நம்பர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    • சென்னை அணி எளிதான வெற்றியை பெற்றது.
    • அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் ஆனார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொரில் ஹோம் கிரவுண்டில் தனது கடைசி லீக் போட்டியை விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சென்னை அணி எளிதான வெற்றியை பெற்றது.

    மேலும், இந்த போட்டியின் மூலம் சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே. தனது 50 ஆவது வெற்றியை பதிவு செய்தது. இதே போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

    சேப்பாக்கம் மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரை தொடர்ந்து பிராவோ 44 விக்கெட்டுகளையும், மார்கெல் 36 விக்கெட்டுகளையும், ஜடேஜா 30 விக்கெட்டுகளையும், பொலிஞ்சர் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். 

    • சி.எஸ்.கே. அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஒரே மைதானத்தில் 50 வெற்றிகளை பெற்ற மூன்றாவது அணி.

    ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (மே 12) நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 50 ஆவது வெற்றியை பதிவு செய்தது. ஐ.பி.எல். தொடரில் ஒரே மைதானத்தில் 50 வெற்றிகளை பெற்ற மூன்றாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மாறியுள்ளது.

     


    முன்னதாக மும்பை இந்தியன்ஸ் வான்கடே மைதானத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஈடன் கார்டன் மைதானத்தில் 52 வெற்றிகளை பெற்றுள்ளன. அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் 50 ஆவது வெற்றியை பெற்றுள்ளது.

    சேப்பாக்கத்தில் 50 ஆவது வெற்றியை கொண்டாடும் வகையில், சென்னை வீரர்களுக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்த சென்னை ரசிகர்களுக்கு சி.எஸ்.கே. சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • டேரில் மிட்செல் 22 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
    • ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

    ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் ஜோடி முறையே 24 மற்றும் 21 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இவரை தொடர்ந்து ஆடிய ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரெல் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். ஜூரெல் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷுபம் தூபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ரியான் பராக் ஆட்டமிழக்காமல் 47 ரன்களை குவித்தார்.

    இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை குவித்துள்ளது. சென்னை சார்பில் சிமர்ஜித் சிங் மூன்று விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    எளிய இலக்கை துரத்திய சென்னை அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 18 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் 22 ரன்களையும், மொயின் அலி 10 ரன்களையும், ஷிவம் தூபே 18 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    18.2 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி 42 ரன்களை குவித்தார்.

    ராஜஸ்தான் சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், பர்கர் மற்றும் சாஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • சிமர்ஜித் சிங் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நடப்பு ஐ.பி.எல். தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது. இந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போகும் அடுத்த மூன்று அணிகள் எவை என்பதை நிர்ணயிக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன.

    அந்த வகையில், இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் ஜோடி முறையே 24 மற்றும் 21 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து ஆடிய ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரெல் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். ஜூரெல் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷுபம் தூபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ரியான் பராக் ஆட்டமிழக்காமல் 47 ரன்களை குவித்தார்.

    இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை குவித்துள்ளது. சென்னை சார்பில் சிமர்ஜித் சிங் மூன்று விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    • சிஎஸ்கே அணி நாளை ராஜஸ்தான் அணியை எதிர் கொள்கிறது.
    • இந்த போட்டி சென்னை சேப்பாகத்தில் நடைபெறுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒய்வு பெற்ற டோனி தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரையில் 17 சீசன்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.

    கடந்த சீசனுடன் டோனி ஓய்வு பெறப் போவதாக கூறப்பட்ட நிலையில், இன்னொரு சீசனும் விளையாடுவேன் என்று இந்த சீசனில் விளையாடி வருகிறார். இந்த சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த சீசனில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பதை தெரிந்து கொள்வதை விட, டோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? என்ற கேள்வி தான் ஒவ்வொரு ரசிகரிடமும் எழுந்துள்ளது.

    எந்த ஊரில் விளையாடினாலும் சிஎஸ்கே ரசிகர்கள் அதிகமாக காணப்படுகின்றனர். இவை அனைத்தும் டோனிக்காக என்பது மிகையாகாது. சிஎஸ்கே தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. டோனி பேட்டிங் செய்தால் மட்டும் போதும் என்ற வகையில் ரசிகர்கள் மைதானத்தில் ஆர்ப்பரிக்கின்றனர்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. ஆனால் கடைசியில் டோனி அடித்த சிக்சரால் அந்த போட்டியில் சிஎஸ்கே அணி வென்றதா அல்லது டெல்லி அணி வென்றதா என்ற கேள்வி எழுப்பும் வகையில் சிஎஸ்கே ரசிகர்கள் டோனியை கொண்டாடி தீர்த்தனர்.

    இதுமட்டுமல்லாமல் டோனியின் புகைப்படம், வீடியோ என எது கிடைத்தாலும் அது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி விடுகிறது. நேற்றைய போட்டியில் கூட ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்து டோனியின் காலில் விழுந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இப்படி டோனி நின்றாலும் நடந்தாலும் அதனை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாகி வருகின்றனர்.

    அந்த வகையில் சிஎஸ்கே அணி அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் டோனி குறித்து நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டுள்ளது. அந்த வாசகம் டோனிக்கு 100 சதவீதம் பொறுத்தமாக இருக்கிறது என ரசிகர்களை அதனை கொண்டாடி வருகின்றனர்.

    அதில் வயது முதிர்ந்த போதிலும்..

    வலிகள் மிகுந்த போதிலும்..

    வலிமை குறைந்த போதிலும்..

    வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!

    என பதிவிட்டிருந்தது.

    இதற்கு முன்பாக சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல என்ற படத்தில் நீ சிங்கம் தான் என்ற பாடல் பத்து தல சிம்புவை விட தல டோனிக்கே உரியதாக ஆகிவிட்டது என்பது போல் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    நாளை நடைபெறும் 61-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் சென்னையில் நடைபெறுகிறது. இதையடுத்து சிஎஸ்கே தனது கடைசி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்த 68-வது லீக் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த 2 போட்டியிலும் தோல்வி அடைந்தால் சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும். டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் எஞ்சிய 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டேரில் மிட்செல் 63 ரன்னிலும் மொயின் அலி 56 ரன்னிலும் வெளியேறினர்.
    • குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா 3 விக்கெட்டும் ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் -சாய் சுதர்சன் சதம் அடித்தனர். சாய் சுதர்சன் 103 ரன்னிலும் சுப்மன் கில் 104 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 231 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரகானே - ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். 1 ரன் எடுக்க ஆசைப்பட்டு 1 ரன்னில் ரச்சின் அவுட் ஆனார். உடனே ரகானேவும் 1 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார்.

    இதனால் சிஎஸ்கே அணி 10 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனை தொடர்ந்து டேரில் மிட்செல் மற்றும் மொயின் அலி ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். இருவரும் அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் குவித்தது.

    டேரில் மிட்செல் 63 ரன்னிலும் மொயின் அலி 56 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த துபே 21, ஜடேஜா 18, சாண்டனர் 0 என வெளியேறினர்.

    இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா 3 விக்கெட்டும் ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • சிஎஸ்கே 11 போட்டியில் 6 வெற்றியுடன் 4-வது இடத்தில் உள்ளது.
    • குஜராத் 11 போட்டியில் 4 வெற்றியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் ஏறக்குறைய இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 59-வது லீக் ஆட்டம் குஜராத் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். "இது நல்ல விக்கெட்டாக தெரிகிறது. சேஸிங் மைதானம். அதனால் நாங்கள் சேஸிங்கை எதிர்பார்க்கிறோம்" என ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.

    குஜராத் டைட்டன்ஸ் அணி:-

    சுப்மன் கில், சாய் சுதர்சன், ஷாருக் கான், டேவிட் மில்லர், மேத்யூ வேட், ராகுல் டெவாட்டியா, நூர் அகமது, உமேஷ் யாதவ், மோகித் சர்மா, கார்த்திக் தியாகி, ரஷித் கான்.

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்: அபிநவ் மனோகர், சந்தீப் வாரியர், பிஆர் சரத், தர்ஷன் நல்கண்டே, ஜெயந்த் யாதவ்.

    சென்னை சூப்பர் கிங்ஸ்:-

    ருதராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ஜடேஜா, டோனி, சான்ட்னெர், ஷர்துல் தாகூர், தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங்

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்: ரகானே, சாய்க் ரஷீத், அவானிஷ், சமீர் ரிஸ்வி, முகேஷ் சவுத்ரி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டோனிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது.
    • அப்படி செய்தால், அவரால் விளையாடவே முடியாத சூழல் உருவாகலாம்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனி, கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டிம் ஒப்படைத்து, அவரை வழிநடத்தி வருவதுடன் பேட்டிங்கில் இறுதிக் கட்டத்தில் களம் இறங்கி விளையாடி வருகிறார்.

    கடைசி ஓவர் அல்லது அதற்கு முந்தைய ஓவரில் களம் இறங்குகிறார். அவர் களம் இறங்கினால் சிக்ஸ் நிச்சயம் என்ற அளவிற்கு சந்திக்கும் பந்துகளை பவுண்டரி லைனுக்கு வெளியே பறக்க விடுகிறார். இதனால் அவர் முன்னதாக ஏன் களம் இறக்கப்படுவதில்லை? என்ற விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது. அவர் முன்னதாக களம் இறங்கினால் உடனே அவுட்டாகிவிடுவார் என்ற எதிர் விமர்சனமும் வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் எம்.எஸ். டோனி ஏன் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்ய வருகிறார் என்பது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக பிளமிங்க் கூறியதாவது:-

    டோனிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது. அப்படி செய்தால், அவரால் விளையாடவே முடியாத சூழல் உருவாகலாம். அதனால்தான், போட்டியில் 2-4 ஓவர்கள் பேட்டிங் மற்றும் முழுவதுமாக கீப்பிங் செய்து புதிய கேப்டனுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார். அதைத் தொடர வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.

    டோனிக்கு மாற்றாக வேறொரு கீப்பர் அணியில் உள்ளார். ஆனால் அவர் டோனி ஆகிவிட முடியாது. 9-வது இடத்தில் டோனி களமிறங்குகிறார் என்பதாலேயே அவரால் போட்டியில் தாக்கம் ஏற்படுத்த முடியாது என நினைத்து விடாதீர்கள்.

    இவ்வாறு பிளமிங் தெரிவித்துள்ளார்.

    ×