search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சன்ரைசர்ஸ் ஐதராபாத்"

    • முதல் 9 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று முதல் இரண்டு இடத்திற்கான வாய்ப்பை உருவாக்கியிருந்தது.
    • ஆனால் கடைந்து ஐந்து போட்டிகளில் மழைக்காரணமாக ஒரு புள்ளி மட்டுமே கிடைத்தது.

    ஐபிஎல் 2024 சீசனில் லீக் ஆட்டங்கள் நேற்றோடு முடிவடைந்தன. ஒவ்வொரு அணிகளும் 14 போட்டிகளில் விளையாடி முடித்துவிட்டன. லீக் போட்டிகளின் கடைசி கட்டங்கள் வரை எந்தெந்த அணிகள் பிளேஆஃப் சுற்றுகளுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு நீடித்துக் கொண்டே இருந்தது.

    இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுகின்றன. ஒவ்வொரு அணியும் முதல் இடங்களை பிடிக்க விரும்பும். ஏனென்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஒருமுறை தோல்வியடைந்தால் மறுமுறை மோத வாய்ப்பு கிடைக்கும்.

    இந்தத் தொடரில் முதலில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 9 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இடத்தை உறுதி செய்யும் என்ற நிலையில் இருந்தது. கைவசம் 5 போட்டிகள் இருந்ததால் எப்படியும் முதல் இடங்களில் ஒரு இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தொடர்ந்து நான்கு போட்டிகளில் அந்த அணிக்கு தோல்விதான் கிடைத்தது. கடைசியாக நேற்று கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 2-வது இடத்திற்கு முன்னேறும் நிலை இருந்தது. ஆனால் மழையால் போட்டி கைவிடப்பட்டது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் 17 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தானை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

    நாளை செவ்வாய்க்கிழமை (21-ந்தேதி) பிளேஆஃப் சுற்றுகள் தொடங்குகின்றன. நாளை நடைபெறும் குவாலிபையர்-1ல் முதல் இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2-வது இடம் பிடித்துள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

     இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி குவாலிபையர்-2ல் விளையாட வேண்டும். இது 24-ந்தேதி நடக்கிறது.

    22-ந்தேதி புதன்கிழமை எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. இதில் 3-வது இடம் பிடித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ்- 4-வது இடம் பிடித்த ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் தோல்வியடையும் அணி வெளியேறும்.

    வெற்றி பெற்ற அணி 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் குவாலிபையர்-2ல் பலப்பரீட்சை நடத்த வேண்டும்.

    • பிரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 71 ரன்களை அடித்தார்.
    • நடராஜன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 19) நடைபெற்ற முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    பஞ்சாப் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய அதர்வா தைடே அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 46 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 71 ரன்களை அடித்தார். அடுத்து வந்த ரோசோ சிறப்பாக ஆடி 49 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவருடன் ஆடிய சஷாங்க் சிங் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    போட்டி முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது. ஐதராபாத் சார்பில் நடராஜன் இரண்டு விக்கெட்டுகளையும், விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் பேட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    சற்றே கடின இலக்கை துரத்திய ஐதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் முதல் பந்திலேயே போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இவருடன் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 66 ரன்களை விளாசினார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 18 பந்துகளில் 33 ரன்களை குவித்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் குமார் 35 ரன்களை அடித்தார்.

    துவக்கம் முதலே அதிரடி காட்டிய ஐதராபாத் அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை குவித்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐதராபாத் அணி இதுவரை தான் சேசிங் செய்ததில் அதிக ரன்களை சேசிங் செய்துள்ளது.

    • பிரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 71 ரன்களை அடித்தார்.
    • நடராஜன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 19) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    பஞ்சாப் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய அதர்வா தைடே அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 46 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 71 ரன்களை அடித்தார். அடுத்து வந்த ரோசோ சிறப்பாக ஆடி 49 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவருடன் ஆடிய சஷாங்க் சிங் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    போட்டி முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது. ஐதராபாத் சார்பில் நடராஜன் இரண்டு விக்கெட்டுகளையும், விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் பேட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • குஜராத் அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.
    • ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் நடைபெற இருந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இன்றைய போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பே மழை குறுக்கிட்டதால், டாஸ் போடப்படாமலேயே போட்டி கைவிடப்பட்டது. இந்த போட்டி கைவிடப்பட்டதை அடுத்து புள்ளிகள் அடிப்பைடையில் ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றுள்ளது.

    முன்னதாக குஜராத் அணி விளையாட இருந்த போட்டி இதே போன்று மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து அந்த அணி நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.
    • ஐதராபாத் அணி வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ஏழு மணியில் இருந்து டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மைதானத்தில் இன்னமும் மழை நீடிப்பதால் டாஸ் குறித்த அடுத்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும்.

    • பவர்பிளேயில் 2-வது முறையாக ஐதராபாத் அணி 100 ரன்கள் குவித்துள்ளது.
    • இதற்கு முன்னதாக டெல்லிக்கு எதிராக பவர்பிளேயில் 125/0 ரன்கள் எடுத்திருந்தது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 9.4 ஓவரில் 167 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் சில சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக கேஎல் ராகுல் டி20 போட்டிகளில் 7500 ரன்கள் குவித்துள்ளார். அபிஷேக் சர்மா இன்று தனது 100-வது டி20 போட்டியில் விளையாடினார்.

    அதோடு, குறைந்த பந்துகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட சீசனாக இந்த சீசன் புதிய சாதனை படைத்துள்ளது. 13,079 பந்துகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுகளில் 16,269 பந்துகளிலும், 2023 ஆம் ஆண்டுகளில் 15,390 பந்துகளிளும் 1000 சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 2022-ம் ஆண்டு 1062 சிக்சர்களும், 2023-ம் ஆண்டு 1124 சிக்சர்களும் அடிக்கப்பட்டுள்ளது.

    இந்த அதிரடியாக விளையாடிய ஹெட் சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேக அரைசதம் விளாசி வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். மேலும், இந்த சீசனில் 2-வது முறையாக 16 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். ஒரு முறை 18 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.

    பவர்பிளேயில் 2-வது முறையாக ஐதராபாத் அணி 100 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டியில் 6 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 107/0 ரன்கள் எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக டெல்லிக்கு எதிராக பவர்பிளேயில் 125/0 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்னில் அவுட் ஆனார்.
    • மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    வான்கடே:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா- டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் குவித்தது. மோசமாக விளையாடிய அபிஷேக் சர்மா 16 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அகர்வால் 5 ரன்னில் அவுட் ஆனார்.

    அதிரடியாக விளையாடிய டிராவிஸ் 48 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 20, கிளாசன் 2, யான்சன் 17, ஷபாஸ் அகமது 10, சமத் 3 என நடையை கட்டினர்.

    இதனையடுத்து கேப்டன் பேட் கம்மின்ஸ் கடைசி நேரத்தில் பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினார். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • மும்பை இந்தியன்ஸ் அணி, 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
    • ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    வான்கடே:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட மும்பை அணி இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற மனநிலையுடன் விளையாடும்.

    ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

    • ஜெய்ஸ்வால் 67 ரன்னிலும் பராக் 77 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும் நடராஜன், பேட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி முதலில் தடுமாறினாலும் கடைசியில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நிதிஷ் ரெட்டி 76 ரன்னிலும் கிளாசன் 42 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே சொதப்பாலாக அமைந்தது. ராஜஸ்தான் முதல் ஓவரில் 1 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பட்லர், சாம்சன் 0 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

    இதனையடுத்து ஜெய்ஸ்வால் - ரியான் பராக் ஜோடி பொறுப்புடன் விளையாடினர். இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். ஜெய்ஸ்வால் 67 ரன்னிலும் பராக் 77 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து ஹெட்மயர் 13 ரன்னில் நட்ராஜன் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

    இதனால் ராஜஸ்தான் வெற்றி பெற 2 ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை கம்மின்ஸ் வீசினார். முதல் பந்தில் ஜூரல் (1) விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த அஸ்வின் 1 ரன் எடுத்தார். அடுத்த 3 பந்துகளை ரோமன் பவல் டாட் பந்துகளாக மாற்றினார். கடைசி பந்தை பவல் சிக்சராக மாற்ற கடைசி ஓவரில் ராஜஸ்தானுக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.

    கடைசி ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் பந்தை அஸ்வின் 1 ரன் எடுத்தார். 2-வது பந்தை பவல் 2 ரன்கள் எடுத்தார். 3-வது பந்தை பவுண்டரி விரட்டினார் பவல். இதனால் கடைசி 3 பந்தில் ராஜஸ்தானுக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைபட்டது. அடுத்த பந்தில் பீல்டிங்கின் தவறால் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. பரபரப்பான கட்டத்தில் 5-வது பந்தும் 2 ரன்கள் எடுக்கப்பட்டது.

    இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனால் ஐதராபாத் அணி 1 ரன்னில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும் நடராஜன், பேட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • ஐதராபாத் தரப்பில் நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். ராஜஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அபிஷேக் 12 ரன்னிலும் அன்மோல்பிரீத் சிங் 5 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனையடுத்து டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினர். மெதுவாக விளையாடிய ஹெட் 44 பந்தில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிளாசன் அவர் பங்குக்கு அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் அதிரடி காட்டிய நிதிஷ் அரை சதம் விளாசி அசத்தினார்.

    இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நிதிஷ் ரெட்டி 76 ரன்னிலும் கிளாசன் 42 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
    • இதில் இரு அணிகளும் தலா 9-ல் வெற்றியை தனதாக்கி இருக்கின்றன.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    ஐதராபாத் அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, ஒரு தோல்வி என்று 16 புள்ளி பெற்று முதலிடத்தில் கம்பீரமாக வீறுநடைபோடுகிறது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அந்த அணி அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 9-ல் வெற்றியை தனதாக்கி இருக்கின்றன.

    • ஐதராபாத் அணிக்கு ஏய்டன் மார்க்ரம் 32 ரன்களை குவித்தார்.
    • தேஷ்பாண்டே நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரரான ரஹானே 9 ரன்களை எடுத்து ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடினார்.

    டேரில் மிட்செல் மற்றும் கேப்டன் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்தனர். மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிவம் துபே வழக்கம் போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் கெய்க்வாட் 54 பந்துகளில் 98 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    போட்டி முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. ஐதராபாத் சார்பில் புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் உனத்கட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    213 ரன்களை துரத்திய ஐதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா முறையே 13 மற்றும் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அன்மோல்பிரீத் சிங் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.

    இவருடன் ஆடிய ஏய்டன் மார்க்ரம் நிதானமாக ஆடினார். இவர் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிதிஷ் குமார், கிளாசன் முறையே 15 மற்றும் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சீரான இடைவெளியில் ஐதராபாத் அணி விக்கெட்டுகளை இழந்தது.

    இதன் காரணமாக ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சென்னை சார்பில் சிறப்பாக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே நான்கு விக்கெட்டுகளையும், பத்திரனா மற்றும் முஸ்தாஃபிசுர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ×