search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ukraine russia war"

    • ரஷியா, சீன அதிபர்கள் நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினர்.
    • அப்போது, உக்ரைன் மீதான போருக்கு அரசியல் ரீதியில் விரைவில் தீர்வு காணப்படும் என்றனர்.

    பீஜிங்:

    கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இதற்கிடையே, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகப் பேசினர். இருதரப்பு இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

    இந்நிலையில் அதிபர் புதின், அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டாக பேட்டியளித்தனர். கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சீனா, ரஷியா இடையே நல்ல நட்பு உள்ளது. இதை யாராலும் சீர்குலைக்க முடியாது.

    எங்களுடைய உள்நாட்டு விவகாரங்கள், நட்பு மற்றும் இறையாண்மை மீதான மூன்றாம் நாடுகளின் தலையீட்டை எதிர்க்கிறோம்.

    உக்ரைன் மீதான போருக்கு விரைவில் அரசியல் ரீதியில் தீர்வு ஏற்படும். இதில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் சீனா செய்யும் என தெரிவித்துள்ளது.

    • ரஷியாவின் பல்வேறு இடங்களை குறிவைத்து உக்ரைன் ஏவுகணைகள் தாக்குதல்.
    • ஏவுகணைகளுடன் டிரோன் மூலமாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது.

    உக்ரைன் மீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவின் தாக்குதலை உக்ரைன் முறியடித்து வருகிறது.

    தற்போது தரைவழி தாக்குதல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், வான்தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக டிரோன்கள் மூலம் தாக்குதல் அதிகரித்து வருகின்றன. இதனால் இருதரப்பும் வான்பாதுகாப்பு சிஸ்டத்தை அதிகரித்துள்ளது.

    கடந்த மாதம் அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ரஷியாவின் ஏவுகணை தாக்குதல்களை உக்ரைனால் வெற்றிகரமாக தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக உக்ரைன் ரஷியாவில் உள்ள சுத்தரிக்கு நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது

    இந்த நிலையில் இன்று ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவை நோக்கி உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷியா தெரிவித்துள்ளத.

    கிரிமியா பகுதியில் கருங்கடல் பகுதியில் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.

    கருங்கடலுக்கு மேற்பகுதியிலும், பெல்பெக் விமானப்படை தளத்திற்கு அருகிலும் உக்ரைனின் பல ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டது. சுடடு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகளின் உதிரிகள் வீடுகள் மீது விழுந்தன. ஆனால், இதன் காரணமாக காயம் ஏதும் ஏற்படவில்லை என் செவாஸ்டாபோல் கவர்னர் மிகைல் ரஸ்வோஜயேவ் தெரிவித்துள்ளார்.

    ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் 9 உக்ரைன் டிரோன்கள், இரண்டு வில்ஹா ராக்கெட், இரண்டு ரேடார் எதிர்ப்பு HARM ஏவுகணைகள் பொல்கோரோட் மாகாணத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின்போது ஏவுகணைகள் வீடுகள் மீது விழுந்து தீப்பிடித்தது. இதில் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.

    அத்துடன் குர்ஸ்க் மாகாணத்தில் ஐந்து உக்ரைன் டிரோன்கள், பிரியன்ஸ்க் மாகாணத்தில் மூன்று டிரோன்கள் ஆகியவற்றையும் சுட்டு வீழ்த்தியதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் கிழக்கு எல்லையில் இருந்து சுமார் ஆயிரம் கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள டாடார்ஸ்டான் மாகாணத்திலும் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    கடந்த இரண்டு நாட்களில் ரஷியா 100 முதல் 125 சதுர கிலோ மீட்டர் அளவிலான உக்ரைன் பகுதியை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிலப்பரப்பிற்குள் ஏழு கிராமங்கள் உள்ளன. ஆனால், இந்த கிராமங்களில் இருந்து மக்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டனர்.

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கள் இரண்டு பயணமான நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ளார். இந்த நிலையில் இந்த தாக்குதலும், ரஷியாவின் பதிலடியும் நடந்துள்ளது.

    • உக்ரைன் அரசின் பாதுகாப்பு மற்றும் உளவுப்பிரிவில் பணியாற்றி வந்த தளபதிகள் இரண்டு பேரும் ரஷியாவின் உளவுத்துறையினருக்கு துப்பு சொல்லி வந்துள்ளனர்.
    • ஒரு கட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொன்றுவிடுமாறு ரஷியா சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    கீவ்:

    அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள சக்தி வாய்ந்த ராணுவ அமைப்பான நேட்டோவில் இணைவதாக உக்ரைன் அறிவித்ததையடுத்து அதன் மீது அண்டை நாடான ரஷியா போரை தொடங்கியது.

    சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி வருவதால் ராணுவ பலம் மிகுந்த ரஷியாவின் நடவடிக்கையை சமாளித்து வருகிறது. இருப்பினும் உக்ரைன் மீது கூலிப்படை தாக்குதல், ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றுடன் கூடிய தாக்குதலை ரஷியா மேற்கொண்டு உக்ரைன் நாட்டை ஒடுக்க முயற்சித்து வருகிறது.

    இந்தநிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல சதி திட்டம் தீட்டியதற்காக உளவுப்பிரிவில் கர்னல் பதவி வகித்து வந்த 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல உண்மைகளை அவர்கள் கக்கியுள்ளனர். அவற்றின் விவரம் வருமாறு:-

    உக்ரைன் அரசின் பாதுகாப்பு மற்றும் உளவுப்பிரிவில் பணியாற்றி வந்த தளபதிகள் இரண்டு பேரும் ரஷியாவின் உளவுத்துறையினருக்கு துப்பு சொல்லி வந்துள்ளனர்.

    இதற்காக பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளனர். இதன்மூலம் நாட்டின் ரகசிய நடவடிக்கைகள், ராணுவ தாக்குதல்கள் குறித்தான தகவல்கள் ஆகியவற்றை கசிய விட்டுள்ளனர்.

    ஒரு கட்டத்தில் அவர்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொன்றுவிடுமாறு ரஷியா சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பல கோடி பணம், ரஷியா நாட்டு குடியுரிமை, பெண்கள் ஆகியவை பேரமாக பேசப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புக்கொண்ட பின்னர் ரஷியாவில் இருந்து உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய 2 ஆளில்லா விமானங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு அதிபரை படுகொலை செய்வதற்காக திட்டமும் வகுத்து தரப்பட்டுள்ளது.

    இதுகுறித்தான தகவல்களை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளநிலையில் இருவர் மீதும் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறியுள்ளனர்.

    • போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனைச் சேர்ந்த பலர் மீது ரஷியா கைது வாரண்டு பிறப்பித்துள்ளது.
    • இது பயனற்ற அறிவிப்பு என உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது.

    மாஸ்கோ:

    நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 2 ஆண்டுகளைத் தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. அவற்றின் மூலம் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.

    இதற்கிடையே போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனைச் சேர்ந்த பலர் மீது ரஷியா கைது வாரண்டு பிறப்பித்துள்ளது. மேலும் சர்வதேச நீதிமன்றத்தில் வக்கீலுக்கும் ரஷியா கைது வாரண்டு பிறப்பித்தது.

    இந்தநிலையில் தற்போது உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, முன்னாள் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ மற்றும் தரைப்படைத் தளபதி ஒலெக்சாண்டர் பாவ்லியுக் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.

    மேலும் போரில் உக்ரைனுக்கு உதவியதற்காக எஸ்டோனிய பிரதமர் காஜா கல்லாசையும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் ரஷியா சேர்த்துள்ளது. இதன்மூலம் இந்த பட்டியலில் உள்ளவர்கள் ரஷியாவில் நுழைந்தால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.

    ஆனால் இது பயனற்ற அறிவிப்பு என உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது. மேலும் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரண்டு மட்டுமே உண்மையானது மற்றும் 123 நாடுகளில் செயல்படுத்தக்கூடியது என்பதை நினைவூட்டுவதாகவும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார்.

    சர்வதேச நீதிமன்றத்தால் ஏற்கனவே ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மீது கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றின.
    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை ரஷியா பதிவு செய்துள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றின.

    இந்த நிலையில் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷியா டிரோன் தாக்குதலை நடத்தியது. அந்த டிரோன்கள், கார்கிவ் நகரில் மக்கள் குடியிருப்பு பகுதிகளை தாக்கின.

    இதில் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடும் போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து கார்கிவ் பிராந்திய கவர்னர் சினி ஹுபோவ் கூறும்போது, ஒஸ்னோவியன்ஸ்கி பகுதியில் உள்ள பொதுமக்களின் உள்கட்டமைப்பு மீது ரஷியா டிரோன் தாக்குதல்களை நடத்தியது. கீழே விழுந்த டிரோன்களால் பெரிய அளவில் தீப்பிடித்தது என்றார்.

    இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை ரஷியா பதிவு செய்துள்ளது. மேலும் அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் ரஷியா வைத்துள்ளது.

    இதுகுறித்து ரஷியாவின் டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ரஷிய உள்துறை மந்திரியின் தகவலின்படி, ரஷியாவின் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளார். ஆனால், வேறு எந்த தகவலும் இல்லை என தெரிவித்து உள்ளது.

    • மூதாட்டி லிடியா ஸ்டெபனிவ்னா குண்டுவீச்சுக்கு மத்தியில் ஊன்றுகோல் உதவியுடன் 10 கிலோ மீட்டர் நடந்தே உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்றார்.
    • உணவு, தண்ணீர் இல்லாமல் நடந்ததாகவும், பலமுறை விழுந்ததாகவும், ஆனால் தன்னம்பிக்கையுடன் நடந்து சென்றதாகவும் மூதாட்டி தெரிவித்தார்.

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் ரஷிய படையால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் டொனெட்ஸ்கில் உள்ள ஓச்செரி டைன் பகுதியில் இருந்து 98 வயது மூதாட்டியான லிடியா ஸ்டெபனிவ்னா என்பவர் குண்டுவீச்சுக்கு மத்தியில் ஊன்றுகோல் உதவியுடன் 10 கிலோ மீட்டர் நடந்தே உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்றார். அவரை ராணுவத்தினர் மீட்டு தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றனர். தான் உணவு, தண்ணீர் இல்லாமல் நடந்ததாகவும், பலமுறை விழுந்ததாகவும், ஆனால் தன்னம்பிக்கையுடன் நடந்து சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

    • ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை மந்திரி ரிச்சர்டு மார்லெஸ் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • உக்ரைனுடன் ஆஸ்திரேலியா உறுதியாக துணைநிற்கும் என தெரிவித்தார்.

    கீவ்:

    ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளை கடந்த பிறகும் தொடர்ந்து நடந்து வருகிறது. நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்குத் தேவையான ராணுவ மற்றும் நிதியுதவிகளை வாரி வழங்கி வருகின்றன.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை மந்திரி ரிச்சர்டு மார்லெஸ் உக்ரைன் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைனின் லிவிவ் நகருக்குச் சென்ற அவர், உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷமிஹாலை சந்தித்துப் பேசினார்.

    அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரிச்சர்டு மார்லெஸ், ஆஸ்திரேலிய அரசு சார்பில் உக்ரைனுக்கு குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு, டிரோன், வெடிமருந்து உள்பட மொத்தம் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவித் தொகுப்பு வழங்கப்படும். உக்ரைனுடன் ஆஸ்திரேலியா உறுதியாக துணைநிற்கும் என தெரிவித்தார்.

    • ரஷியா மற்றும் பெலாரஸ் எல்லையில் போலந்து அமைந்துள்ளது.
    • மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் உக்ரைனுக்கு கொண்டு செல்வதற்கான முக்கிய மையமாக திகழ்கிறது.

    இரண்டு ஆண்டுகளை தாண்டி உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வப்போது உக்ரைன் மீது ரஷியா ஏவும் ஏவுகணைகள் எல்லையில் உள்ள போலந்து நாட்டின் வான் எல்லைக்குள் செல்வது உண்டு. இதற்கு போலந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    மேலும், எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. ஒருவேளை போலந்து நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்தால் நேட்டோ அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து ரஷியாவுக்கு எதிராக நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால், இதற்கான அவசியம் இதுவரை ஏற்படவில்லை.

    உக்ரைனுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகள் தலையிட வேண்டாம் என ரஷியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் போலந்து பாராளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ரடேக் சிர்கோர்ஸ்கி பேசினார். அப்போது ரஷியா நேட்டோ மீது தாக்குதல் நடத்தினால், அது அவர்களுக்கு தோல்வியில்தான் முடிவடையும். இருந்தபோதிலும் நேட்டோ தனது பாதுகாப்பை இன்னும் அதிரிக்க வேண்டும்.

    ஐரோப்பிய யூனியன் திட்டங்களை அமைக்கும் நாடுகளின் குழுவில் மீண்டும் போலந்து இணைய விரும்புகிறது எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், போலந்தின் வளர்ச்சியும் பாதுகாப்பும் அட்லாண்டிக் கடல்கடந்த ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு ஆகிய இரண்டின் அடிப்படையிலும் இருக்க வேண்டும். போலந்து உலகளாவிய சவால்களுக்கு பொறுப்பேற்க தயாராக உள்ளது. ஜெர்மனி உடனான நட்பு முக்கியமானது என்றார்.

    நேட்டோ அமைப்பில் உள்ள போலந்து ரஷியா, பெலாரஸ் எல்லைகளை பகிர்ந்துள்ளது. மேலும், உக்ரைன் எல்லையையும் பகிர்ந்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் ஆயுதங்கள் உக்ரைனுக்கு செல்ல முக்கிய புள்ளியமாக அமைந்துள்ளது.

    • உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு சிஸ்டங்களை உடனடியாக வழங்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டால் இந்த போர் ரஷியாவுக்கு சாதமாக சாய்ந்து விடும்.

    உக்ரைன் மீது ரஷியா மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது உக்ரைனில் உள்ள கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவின் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைனிடம் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த வாரம் மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிலையம் மீதான தாக்குதலை உக்ரைனால் எதிர்கொள்ள முடியாமல் போனது.

    நேற்று 8 மாடி கட்டடம் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இத்தாலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது உக்ரைன்- ரஷியா போர், இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத வகையில் ஈரான் தாக்குதல் ஆகியவை குறித்து ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை கொள்கை தலைவர் ஜோசப் பொர்ரேல் ஜி7 நாடுகளில் வெறியுறவுத்துறை மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது "உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு சிஸ்டங்களை உடனடியாக வழங்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டால் இந்த போர் ரஷியாவுக்கு சாதமாக சாய்ந்து விடும். ரஷியாவில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை தாக்கி அழிக்க பேட்ரியாட் ஏர் பாதுகாப்பு ஏவுகனை சிஸ்டம்ஸ் இல்லை என்றால், உக்ரைனில் உள்ள மின்சார் சிஸ்டங்கள் அழிக்கப்படும். எந்தவொரு நாடும் வீடுகளில், தொழிற்சாலைகளில், போரின் முன்னணி களத்தில் மின்சாரம் இல்லாமல் சண்டையிட முடியாது" என்றார்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது இத்தாலி வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனியோ டஜானி "உக்ரைன் தோல்வியடைந்தால் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் புதின் அமரமாட்டார்" என்றார். மேலும், ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதார தடைக்கு அழைப்பு விடுத்தார்.

    • கடந்த வாரம் மின்சார உற்பத்தி நிலையம் மீது தாக்குதால் நடத்தியது.
    • உக்ரைனிடம் தற்போது வான்பாதுகாப்பு உபகரணங்கள் போதுமானதாக இல்லாததால் இழப்புகளை சந்தித்து வருகிறது.

    உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் இருந்து சுமார் 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள செர்னிஹிவ் நகர் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 22 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இன்று காலை ரஷியா 8 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் மீது நடத்திய தாக்குதலில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செர்னிஹிவ் ரஷியா மற்றும் பெலாரஸ் எல்லையில் உள்ளது. இங்கு சுமார் 2.5 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.

    உக்ரைன் மீது ரஷியாவின் தாக்குதல் 3-வது ஆண்டாக நீடித்து வருகிறது. தற்போது அமெரிக்காவின் உதவி கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதால் உக்ரைனால் ரஷியாவின் வான்வழி தாக்குதலை எதிர்கொள்வதற்கு தடுமாறி வருகிறது. இதனால் உக்ரைன் இழப்புகளை சந்தித்து வருகிறது.

    கடந்த வாரம் முக்கியமான மின்சார உற்பத்தி நிலையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 11 ஏவுகணைகளில் ஏழு ஏவுகணைகளை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்தது. மேலும், தாக்குதல் நடத்த ஏவுகணை இல்லாததால் தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

    குளிர்காலத்தில் ரஷியா உக்ரைனை நோக்கி முன்னேறாமல் இருந்தது. ஆனால் ஆயுத உதவி கிடைக்காமல் உக்ரைன் திணறி வரும் நிலையில், இதை சாதமாக பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறி வருவதாக ராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    60 பில்லியன் அமெரிக்க டாலர் அளிவிலான ஆயுத உதவிகளுக்கு அமெரிக்காவின் நாடாளுமன்றம் இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளது. இதனால் உக்ரைனுக்கு ஆயுத உதவி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

    வான்பாதுகாப்பு ஆயுதங்களை வழங்கும்படி மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உதவி கேட்டு வருகிறார். உக்ரைன் போதுமான பாதுகாப்பு ஆயுதங்களை பெற்றிருந்தால் செர்னிஹிவ் தாக்குதல் நடைபெற்றிருக்கிறாது எனவும் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

    • ரஷியா 11 ஏவுகணைகளை மூலம் தாக்குதல் நடத்தியது.
    • ஏழு ஏவுகணைகளை வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டது.

    ரஷியா உக்ரைனின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 11-ந்தேதி டிரிபில்லியா மின்சார உற்பத்தி நிலையத்தை ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் உற்பத்தி நிலையம் முழுமையாக சேதம் அடைந்து 100 சதவீதம் மின்சாரம் தயாரிக்கும் திறனை இழந்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறுகையில் "ரஷியா 11 ஏவுகணைகளை மின்சார உற்பத்தி நிலையம் நோக்கி வீசியது. அதில் உக்ரைன் ராணுவம் ஏழு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. 4 ஏவுகணைகள் டிரிபில்லியா மின்சார நிலையத்தை தாக்கிவிட்டது. ஏனென்றால் எங்களிடம் ஏவுகணைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் இல்லை. மின்சார நிலையத்தை பாதுகாப்பதற்கான ஏவுகணை அனைத்தும் தீர்ந்துவிட்டன" என்றார்.

    இந்த மின்சார உற்பத்தி நிலையம் கீவ் நகரின் தெற்குப்பகுதியில் 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. கீவ், ஜிடோமிர், செர்காசி ஆகிய நகரங்களுக்கு மின்சாரம் வழங்கி வருகிறது.

    ரஷியாவின் தாக்குதலில் சிறந்த முறையில் எதிர்கொள்ளும் இடமாக உக்ரைன் தலைநகர் விளங்குகிறது. ஆனால், உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் விவகாரம் அமெரிக்காவின் பாராளுமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் உள்ளதால் வான்பாதுகாப்பில் சற்று குறைபாடு ஏற்பட்டுள்ளது.

    • சுமார் 3 மில்லியன் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கி வந்தது.
    • பெரிய அளிவலான தாக்குதல் எங்களுடைய எரிசக்தி துறையை மோசமாக பாதித்துள்ளதாக உக்ரைன் எரிசக்தி துறை மந்திரி தெரிவி்துள்ளார்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை. சில நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வந்தன. இருந்த போதிலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. தற்போது சுவிட்சர்லாந்து அமைதி பேச்சுவார்த்தை முயற்சியை கையில் எடுத்துள்ளது.

    தற்போது இரு நாடுகளும் மாறிமாறி கட்டமைப்புகளை குறிவைத்து டிரோன் தாக்குதல், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த வகையில் உக்ரைனின் தலைநகர் கீவ், செர்காசி, ஜைடோமிர் மாகாணங்களுக்கு மின்சாரம் வழங்கி வந்த டிரைபில்ஸ்கா என்ற மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிலையத்தை ரஷியா தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.

    மின்சார உற்பத்தி நிலையம் எரிந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை புகை மூட்டமாக காட்சி அளித்ததாகவும், அது பயங்கரமானது எனவும் ஆலையை நிர்வகிக்கும் வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

    ரஷியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு பதிலடியாக உக்ரைன் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மாஸ்கோ தெரிவித்துள்ளது.

    டிரைபில்ஸ்கா உற்பத்தி நிலையம் சுமார் 3 மில்லியன் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கி வந்தது. இந்த வருடத்தில் இருந்து இதன் தேவை சற்று குறைவாக என்பதால் மிகப்பெரிய பாதிப்பு இருக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.

    ஆனால் வரவிருக்கும் கோடைக்காலத்தின்போது ஏசி பயன்படுத்தப்படும் என்பதால் அதிக மின்சார தேவை ஏற்படும். அப்போது பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    கார்கிவில் உள்ள எரிபொருள் கட்டமைப்பு மீது 10-க்கும் மேற்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் 2 லட்சம் மக்களுக்கு மேல் வசித்து வருவதாகவும், தொடர்ந்து அவர்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்படுவதாகவும் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

    பெரிய அளிவலான தாக்குதல் எங்களுடைய எரிசக்தி துறையை மோசமாக பாதித்துள்ளதாக உக்ரைன் எரிசக்தி துறை மந்திரி தெரிவி்துள்ளார்.

    2022-ம் ஆண்டு போர் தொடுத்ததில் இருந்து ரஷியா இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த மாதம் உக்ரைனின் எரிசக்தி தொடர்பான கட்டமைப்புகள் மீது அதிக அளவில் தாக்குதல் நடத்தியது. இதனால் நாட்டின் பாதி அளவிலான பகுதிகள் இருளில் மூழ்கியது.

    இந்த தாக்குதல் பாதுகாப்பதற்காகவும், எனர்ஜி சொத்துகளை பாதுகாப்பதற்கும் உக்ரைன் நாட்டிற்கான எச்சரிக்கை எனக் கருதப்படுகிறது. மேலும், உடனடியாக அவற்றை சரி செய்வதற்கான பரிசோனை எனவும் கூறப்படுகிறது.

    இதுபோன்ற வான் தாக்குதலை சமாளிக்க அதிகப்படியான வான் பாதுகாப்பு சிஸ்டம் தேவை என அதிகாரிகள் கேட்டு வரும் நிலையில், மெதுவாகத்தான் உக்ரைனுக்கு சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுவதாக தெரிகிறது.

    ×